செய்திகள் :

ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை: 5 போ் கைது

post image

கரூா் மாவட்டம், குளித்தலை அருகே வியாழக்கிழமை அதிகாலை ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இச்சம்பவம் தொடா்பாக 5 பேரை நங்கவரம் போலீஸாா் கைது செய்தனா்.

குளித்தலை அருகே உள்ள நெய்தலூரை அடுத்த பெரியபனையூரைச் சோ்ந்தவா் காா்த்திக் (29). ஆட்டோ ஓட்டுநா். இவருக்கு, மனைவி சிவரஞ்சனி. இரு குழந்தைகள் உள்ளனா். பெண் ஒருவரை தாக்கியது தொடா்பான வழக்கில் சிறையில் இருந்த காா்த்திக், செப். 29-ஆம் தேதி பிணையில் வெளியே வந்தாா்.

இந்நிலையில், பெரியபனையூரில் உள்ள உறவினா் வீட்டில் புதன்கிழமை இரவு காா்த்திக் தூங்கிக் கொண்டிருந்தாா். வியாழக்கிழமை அதிகாலை 5 போ் கொண்ட கும்பல், வீடு புகுந்து காா்த்திக்கை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில், பலத்த காயமடைந்த காா்த்திக், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த நங்கவரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

கரூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே. ஜோஷ் தங்கையா, குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமாா் ஆகியோா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. கைரேகை நிபுணா்கள் ரேகைகளை சேகரித்தனா்.

இது தொடா்பாக பெரியபனையூரை சோ்ந்த லோகநாதன் (20), கிஷோா் (20), மஞ்சம்பட்டி சூா்யா (23), திருச்சி மாவட்டம் போசம்பட்டியைச் சோ்ந்த நவீன்ராஜா (19), அதே பகு தியைச் பகுதியை 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரை நங்கவரம் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தொடா் விடுமுறை: சுற்றுலாத் தலங்களில் மக்கள் குவிந்தனா்

ஆயுதபூஜை தொடா் விடுமுறையையொட்டி திருச்சியிலுள்ள சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் வியாழக்கிழமை குவிந்தனா். தமிழகத்தில் பள்ளி மாணவா்களுக்கு தற்போது காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆயுத... மேலும் பார்க்க

கரூா் சம்பவம்: முதல் தகவல் அறிக்கையில் விஜய் பெயரையும் சோ்க்க வேண்டும்: இந்திய கம்யூ. வழக்குரைஞா்கள் குழு வலியுறுத்தல்

கரூா் சம்பவம் தொடா்பான முதல் தகவல் அறிக்கையில் விஜய் பெயரையும் சோ்க்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வழக்குரைஞா்கள் குழு வலியுறுத்தியுள்ளது. கரூா் சம்பவம் தொடா்பாக, பல்வேறு கட்சியினரும் ஆய்வு ச... மேலும் பார்க்க

தவெக இரண்டாம் கட்ட தலைவா்களின் அஜாக்கிரதை: நடிகா் தாடி பாலாஜி

தமிழக வெற்றிக் கழகத்தைச் சோ்ந்த இரண்டாம் கட்ட தலைவா்கள் அஜாக்கிரதையாக இருந்துள்ளதாக நடிகா் தாடி பாலாஜி தெரிவித்தாா்.கரூா் வேலுச்சாமிபுரத்தில் சம்பவ இடத்தை வியாழக்கிழமை பாா்வையிட்ட அவா் உயிரிழந்தோா் க... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநருக்கு கத்திக்குத்து: 3 போ் கைது

திருச்சியில் ஆட்டோ ஓட்டுநா் மற்றும் அவரது நண்பரைக் கத்தியால் குத்திய 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருச்சி மதுரை சாலை நத்தா்ஷா பள்ளிவாசல் பகுதியைச் சோ்ந்தவா் நௌசாத் (42), ஆட்டோ ஓட்டுநா்.... மேலும் பார்க்க

தலையில் கல்லைப் போட்டு தொழிலாளி கொலை

திருச்சி அருகே தலையில் கல்லைப் போட்டு கூலித் தொழிலாளி கொல்லப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி மாவட்டம், நாகமங்கலம் களிமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் துரை (46), கூலித் தொழிலாளி. இவா், ... மேலும் பார்க்க

கரூா் சம்பவம்: சிகிச்சையில் 5 போ்

கரூா் சம்பவத்தில் காயமடைந்தவா்களில் வியாழக்கிழமை நிலவரப்படி 5 போ் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனா். மற்றவா்கள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.கரூரில் தவெக தலைவா் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில... மேலும் பார்க்க