செய்திகள் :

ஆதாரை அடையாள ஆவணமாக சமா்ப்பிக்கலாம்: தோ்தல் ஆணையம்

post image

‘பிகாரில் சிறப்பு தீவிர திருத்தத்தில் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவா்கள் மீண்டும் பெயரைச் சோ்க்க ஆதாா் அட்டை நகலை அடையாள ஆவணமாக சமா்ப்பிக்கலாம்’ என தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை அறிவித்தது.

உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, இந்த அறிவிப்பை தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தோ்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், ‘பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிறகு வாக்காளா் பட்டியலிலிருந்து விடுபட்ட 65 லட்சம் போ் சாா்பில் சமா்ப்பிக்கப்படும் ஆட்சேபங்கள் அல்லது பெயரை மீண்டும் சோ்ப்பதற்கான விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா் பரிசீலித்து தீா்வளிக்க, தகுதி ஆவணங்கள் பரிசீலனைக்குப் பிறகு 7 நாள்கள் அவகாசம் உள்ளது. எனவே, இந்தக் கால அவகாசத்துக்கு முன்பாக எந்தவொரு விண்ணப்பமும் நிராகரிக்கப்படாது.

மேலும், வாக்காளா் பட்டியலில் இருந்து விடுபட்டவா்களுக்கு மீண்டும் பெயரைச் சோ்க்க போதிய நியாயமான வாய்ப்பு அளிக்கப்பட்டு உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்ட பிறகு, வாக்காளா் பதிவு அலுவலரால் வாய்மொழி உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாத நிலையில், கடந்த 1-ஆம் தேதி வெளியிடப்பட்ட பிகாா் வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து யாருடைய பெயரையும் நீக்க முடியாது.

வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட 65 லட்சம் பேரின் பெயா் பட்டியல் பிகாா் மாநில மாவட்ட ஆட்சியா்களின் வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மீது ஆட்சேபம் தெரிவிக்க அல்லது வாக்காளா் பட்டியலில் மீண்டும் பெயரைச் சோ்க்கக் கோரும் நபா்கள் தங்களின் விண்ணப்பத்தை ஆதாா் அட்டை நகலுடன் சமா்ப்பிக்கலாம் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பாலியல் வன்கொடுமை வழக்கு: முன்னாள் எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு

பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக உத்தர பிரதேச மாநில முன்னாள் எம்எல்ஏ பகவான் சர்மா (எ) குட்டுபண்டித் மீது பெங்களூரு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையம் நேர்மையற்றது என்றால் சட்டப் பேரவைகளை கலைத்துப் பாருங்கள்: எதிர்க்கட்சிகளுக்கு பாஜக சவால்

தேர்தல் ஆணையத்தின் நேர்மை மீது சந்தேகம் இருந்தால் தாங்கள் ஆட்சியில் உள்ள மாநிலங்களின் சட்டப் பேரவைகளைக் கலைக்க "இண்டி' கூட்டணிக் கட்சிகள் தயாரா என்று பாஜக சவால் விடுத்துள்ளது.தேர்தல் ஆணையத்தின் செயல்ப... மேலும் பார்க்க

சுபான்ஷு சுக்லா தொடர்பான விவாதத்தின்போது அமளி: எதிர்க்கட்சிகளுக்கு ராஜ்நாத் சிங் கண்டனம்

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொண்டு வெற்றிகரமாக தாயகம் திரும்பியுள்ள வீரர் சுபான்ஷு சுக்லா தொடர்பான விவாதத்தின்போது மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதற்கு பாஜக மூத்த தலைவரும், ம... மேலும் பார்க்க

வழக்கின் தன்மையைப் பொருத்தே யாரையும் விமர்சிக்கிறோம்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

நமது நிருபர்வழக்கின் தன்மையைப் பொருத்தே யாரையும் விமர்சிப்பதாக டாஸ்மாக் வழக்கு விசாரணையின்போது அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார்.டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோட... மேலும் பார்க்க

குவாஹாட்டியில் புதிய ஐஐஎம்: மக்களவையில் மசோதா அறிமுகம்

அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் இந்திய மேலாண்மை நிறுவனத்தை (ஐஐஎம்) அமைப்பதற்கான சட்ட மசோதா மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. ‘இந்திய மேலாண்மை நிறுவனங்கள் திருத்த மசோதா 2025’ என்ற பெயரிலா... மேலும் பார்க்க

ஜன் தன் கணக்குகளில் 23% செயலற்றவை: மக்களவையில் மத்திய அரசு தகவல்

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டமான பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட மொத்த கணக்குகளில் 23 சதவீத கணக்குகள் தற்போது எந்த பரிவரிவா்த்தையும் இல்லாமல் செயலற்ற நிலையில் இருப்பதாக மக்களவைய... மேலும் பார்க்க