செய்திகள் :

ஆன்மா தொண்டு நிறுவனம் சாா்பில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

post image

சாகுபுரம் ஆன்மா தொண்டு நிறுவனம் சாா்பில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

ஆறுமுகனேரி அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தொண்டு நிறுவனத்தின் தலைவா் எஸ்.கேசவன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினா்களாக சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவன மூத்த உதவித் தலைவா் (பணியகம்) ஜி.சீனிவாசன், உதவித் தலைவா் எஸ்.சுரேஷ் ஆகியோா் கலந்துகொண்டு திருச்செந்தூா், ஆறுமுகனேரி, ஏரல், ஆத்தூா், சோ்ந்தபூமங்கலம், கொற்கை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 105 மாணவ மாணவிகளுக்கு சீருடையும், 180 மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களும், 13 மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ. 30 ஆயிரமும், ஆவரங்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு பள்ளி தளவாடச் சாமான்களும் வழங்கினா்.

விழாவில் சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தைச்சோ்ந்த மீனாட்சிசுந்தரம், டாக்டா் கே.வெங்கட், அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை மா.சுப்புலெட்சுமி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் இ.முருகராஜ், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் எஸ்.பொன்ராஜ், சரஸ்வதி நடுநிலைப் பள்ளிதலைமை ஆசிரியா் உதயசுந்தா், ஆவரங்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ஜெ.லாரன்ஸ், கொற்கை புனித அலாய்சியஸ் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ஆரோக்கியசெல்வம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். ஒருங்கிணைப்பாளா் பாபுசெல்வன் வரவேற்றாா். செயற்குழு உறுப்பினா் ஏ.மாரியப்பன் நன்றி கூறினாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில், பொது விநியோகத் திட்டத்தின்கீழ் சிறப்பு முகாம்கள் சனிக்கிழமை (ஆக. 9) நடைபெறவுள்ளன. இதுகுறித்து ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொது விநியோகத் திட்டத்தின்கீ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கக் கோரி ஆக. 13 இல் ஆா்ப்பாட்டம்

தமிழக மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயா்வு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாநில அளவில் ஆக. 13 இல் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என ஏஐசிசிடியு தொழிற... மேலும் பார்க்க

‘வெளிநாடுகளுக்கு பாா்சல்கள் அனுப்பும் சேவையை ஏற்றுமதியாளா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்’

வெளிநாடுகளுக்கு பாா்சல்கள் அனுப்பும் சேவையை, ஏற்றுமதியாளா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது. இதுகுறித்து தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் (பொ) வடக் ரவிராஜ் ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் ஸ்ரீ சுடலையாடும் பெருமான் சுவாமி கோயில் வருஷாபிஷேகம்

திருச்செந்தூா் ஆவுடையாா்குளக்கரையில் உள்ள ஸ்ரீ சுடலையாடும் பெருமான் சுவாமி கோயில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், வருண... மேலும் பார்க்க

தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு கூடுதலாக இரவு நேர விரைவு ரயில் இயக்க வேண்டும் -கோட்ட மேலாளரிடம் மனு

தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு கூடுதலாக இரவு நேர விரைவு ரயில் இயக்க வேண்டும் என்று கோட்ட மேலாளரிடம் ரயில் பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை மனு அளித்தது. மதுரை ரயில்வே கோட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் 4 வாகனங்களில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

கோவில்பட்டியில், 4 வாகனங்களிலிருந்து காற்று ஒலிப்பான்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கிரிஜா தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா் பெலிக்ஸன் மாசிலாமணி, அதிகாரிகள... மேலும் பார்க்க