செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூரின் தொடர் விளைவு! பாகிஸ்தான் விமானத் தளத்தின் செயல்பாட்டில் தாமதம்!

post image

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் தாக்குதலுக்குள்ளான பாகிஸ்தான் விமானத் தளம் செயல்படாது என தகவல் வெளியாகியுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பாகிஸ்தானின் முக்கிய விமானத் தளங்களைக் குறிவைத்து, இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இதன் விளைவாக, பாகிஸ்தானின் முக்கிய விமானத் தளமான ரஹிம் யார் கான் மூடப்பட்டு செயல்படாமல் உள்ள நிலையில், தொடர்ந்து ஜூலை 4 ஆம் தேதிக்கு பின்னர்தான் செயல்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலா மக்கள் மீது ஏப்ரல் 22 ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.

அதன் தொடர்ச்சியாக ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து, மே 6 ஆம் தேதி நள்ளிரவில் இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.

பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது மட்டுமே இந்தியா தாக்குதல் நடத்திய நிலையில், காஷ்மீரில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக பாகிஸ்தானின் விமானத் தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.

இதையும் படிக்க:ஈரான் தலைமை மதகுரு கமேனிக்கு இஸ்ரேல் வெளிப்படை எச்சரிக்கை!

லோக்பால் அமைப்பில் வழக்கு விசாரணைப் பிரிவு உருவாக்கம்

லோக்பால் சட்டம் இயற்றப்பட்டு 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த அமைப்பில் வழக்கு விசாரணைப் பிரிவு தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. முன்னதாக, புகாா் மீது விசாரணை நடத்துவதற்கான பிரிவு அமைக்கப்பட்ட நிலையில், தற்... மேலும் பார்க்க

என்னதான் ஆச்சு ஏர் இந்தியாவுக்கு..? மீண்டும் தில்லிக்கே திரும்பிய விமானம்!

தில்லியிலிருந்து வியட்நாம் நாட்டுக்கு இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறினால் மீண்டும் தில்லியிலேயே தரையிறக்கப்பட்டது. தில்லியிலிருந்து வியட்நாமின் ஹோ சி மின் நகரத்துக்கு இன்று (ஜூன் ... மேலும் பார்க்க

ஆர்சிபி கூட்ட நெரிசல் விவகாரம்! 3 ஆண்டு சிறை, ரூ. 5 லட்சம் அபராதத்துடன் மசோதா முன்மொழிவு!

பெங்களூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், கூட்ட நெரிசல் கட்டுப்பாடு மசோதா முன்மொழியப்பட்டது.ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் அணி கோப்பை வென்றதை கொண்டாடுவதற்காக பெங்களூரில... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியைப் புகழ்ந்த பிரிட்டன் முன்னாள் பிரதமர்!

பாஜக அரசின்கீழ் தில்லியில் நல்லாட்சி நடத்தப்படுவதாக பிரிட்டன் முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.தில்லி தலைமை செயலகத்துக்கு வருகை தந்த பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், தில்லி முதல்வர் ரேகா குப்தா, த... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் புதியதாக 59 கரோனா பாதிப்புகள் உறுதி! ஒருவர் பலி!

மகாராஷ்டிரத்தில் புதியதாக 59 கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் நாளுக்கு நாள் கரோனா பாதிப்புகள... மேலும் பார்க்க

ஒடிசாவில் தொடரும் காலரா! பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு!

ஒடிசாவில் காலரா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பதால், 2 மாவட்டங்களின் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களின் திறப்பை ஒத்திவைக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கோடைக்கால விடுமுறைகள் ம... மேலும் பார்க்க