செய்திகள் :

ஆபாச படம்: நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்குப் பதிவு!

post image

பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஆபாச படக் காட்சிகளில் நடித்ததாக எழுந்த புகாரில், பிரபல நடிகை ஸ்வேதா மேனன் மீது எர்ணாகுளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

எர்ணாகுளம் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மலையாள திரையுலகில் ரதிநிர்வேதம், களிமண், சால்ட் அண்ட் பெப்பர் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ஸ்வேதா மேனன். தமிழிலும் சில திரைப்படங்களிலும், பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். 2018 ஆம் ஆண்டில், மோகன்லால் தொகுத்து வழங்கிய மலையாள ரியாலிட்டி தொலைக்காட்சி தொடரான பிக் பாஸிலும் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில், கொச்சியை சேர்ந்த மார்ட்டின் என்ற சமூக ஆர்வலர் ஸ்வேதா மேனனுக்கு எதிராக கொச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் நடிகை ஸ்வேதா மேனன் ரதிநிர்வேதம், பாலேரி மாணிக்கம், களிமண் போன்ற மலையாள திரைப்படங்களிலும், காமசூத்ரா போன்ற ஆணுறை விளம்பரத்திலும் ஆபாசமாக நடித்துள்ளார். பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஆபாச படக் காட்சிகளில் நடித்துள்ளதை சுட்டிக்காட்டி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இவரது புகார் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து எர்ணாகுளம் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவை விசாரித்த நீதிமன்றம் நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டது.

எர்ணாகுளம் நீதிமன்ற உத்தரவை அடுத்து கொச்சி போலீஸார் நடிகை ஸ்வேதா மேனன் மீது ஆபாசத் தடைச் சட்டம் மற்றும் ஐடி சட்டத்தின் கீழ் இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்திற்கான நிர்வாகக் குழுவிற்கான தேர்தல் தேர்தல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு ஸ்வேதா மேனன் போட்டியிடுகிறார். தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த ஆறு பேர்களில் மூத்த நடிகர் ஜெகதீஷ் உள்பட நான்கு பேர் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுள்ளனர்.

எனவே, இந்த தேர்தலில் ஸ்வேதா மேன்ன் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து ஸ்வேதா மேனன் இதுவரை எந்தவொரு அறிக்கையும் வெளியிடவில்லை.

நடிகை ரம்யா குறித்த விமா்சனம்: மேலும் ஒருவா் கைது

A case has been registered against model Shweta Menon for allegedly earning money via vulgar or obscene films.

ஆபரேஷன் அகால் 9வது நாள்: குல்காம் தாக்குதலில் 2 வீரர்கள் வீர மரணம்

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் நடந்து வரும் ஆபரேஷன் அகால் 9வது நாளில், இரண்டு வீரர்கள் வீர மரணம் அடைந்ததாக ராணுவம் உறுதி செய்திருக்கிறது.வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் ராணுவத்தினருக்கும்... மேலும் பார்க்க

ஐஏஎஸ் அதிகாரிகள் இணை அரசாங்கம் நடத்துவது துரதிருஷ்டவசமானது: உயர்நீதிமன்றம் கண்டனம்

சென்னை: தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரு இணை அரசாங்கத்தை நடத்தி வருவது துரதிருஷ்டவசமானது என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. எழுத்தாளர்களுக்கான கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீட... மேலும் பார்க்க

சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

சென்னையில் இருந்து ஆந்திரம் மாநிலத்துக்கு கடத்த முயன்ற 900 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை எழும்பூர் ரய... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் கடத்தப்பட்ட குழந்தை தமிழ்நாட்டில் மீட்கப்பட்டது எப்படி?

சத்தீஸ்கர் மாநிலம் துர்க் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட ஒன்றரை வயது ஆண் குழந்தையை 13 நாள்களுக்குப் பின் திருவிடைமருதூர் அருகே திருநீலக்குடியில் சத்தீஸ்கர் மாநில போலீஸார் மீட்டனர். குழந்தையை மீட்ட போ... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் முறைகேடு: பெங்களூருவில் ராகுல் காந்தி தலைமையில் இன்று ஆா்ப்பாட்டம்

வாக்காளா் பட்டியல் முறைகேடுகளை கண்டித்து மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தலைமையில் பெங்களூருவில் இன்று(ஆக.8) ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது. 2024 ஆம் ஆண்டு கா்நாடகத்தில் நடைபெற்ற மக்களவைத் தோ்... மேலும் பார்க்க

டிரம்ப் வரி விதிப்பு சர்ச்சைக்கு மத்தியில் புதின் - அஜீத் தோவல் சந்திப்பு!

புது தில்லி: ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் கண்டித்து இந்தியப் பொருள்கள் மீதான இறக்குமதி வரியை அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதி... மேலும் பார்க்க