செய்திகள் :

ஆம்பூர் கலவர வழக்கு: `22 பேர் குற்றவாளிகள்’ -முன்னாள் எம்.எல்.ஏ சொத்துகளைப் பறிமுதல் செய்ய உத்தரவு!

post image

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 24-ம் தேதி திடீரென மாயமானார். அது குறித்து, பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த ஷமீல் அகமது என்பவரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, போலீஸார் கடுமையாக தாக்கியதாகவும், அதனால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் ஷமீல் அகமது உயிரிழந்துவிட்டதாகவும் உறவினர்கள் தரப்பில் புகார்ச் சொல்லப்பட்டதால், இன்ஸ்பெக்டராக இருந்த மார்ட்டின் பிரேம்ராஜ் உட்பட 7 போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

உயிரிழந்த ஷமீல் அகமது

ஆனாலும், 2015 ஜூன் 27-ம் தேதி 500-க்கும் மேற்பட்டோர் ஆம்பூரில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டதோடு, வன்முறை கலவரத்திலும் ஈடுபட்டனர். வாகனங்கள் சூறையாடப்பட்டன; போலீஸார் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டன. வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்காக போலீஸார் தடியடி நடத்தியதால், போராட்டக்காரர்கள் போலீஸாருடனும் மோதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் 15 பெண் போலீஸார் உட்பட 91 பேர் படுகாயமடைந்தார்கள்.

30-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள், லாரிகள், 7 போலீஸ் வாகனங்கள் உட்பட ஏராளமான பொதுச் சொத்துகளும் சேதப்படுத்தப்பட்டன. நீண்ட முயற்சிக்குப் பிறகே, போலீஸார் வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

தமிழகத்தையே பெரும் பரபரப்புக்குள்ளாக்கிய ஆம்பூர் கலவர வழக்கில் தொடர்புடைய 191 பேர் மீது 12 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (28-8-2025) ஆம்பூர் கலவர வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனால் நிலவிய பதற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக, ஆம்பூர் மற்றும் திருப்பத்தூர் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிலும் ஏராளமான போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குவிக்கப்பட்டிருந்தனர்.

சேதப்படுத்தப்பட்ட பேருந்துகள்

அதன்படி, இன்று மதியம் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்பட்ட 191 பேரில், 161 பேர் (இறப்பு உட்பட) விடுதலைச் செய்யப்பட்டிருக்கிறார்கள். 22 பேர் குற்றவாளிகள் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கான தண்டனை விவரங்களும் அறிவிக்கப்படவிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், கலவரத்துக்குத் தலைமை தாங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ அஸ்லம் பாஷாவின் சொத்துகளை, சேதப்படுத்தப்பட்ட பொதுச்சொத்துகளுக்கு ஈடாக பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம், அஸ்லம் பாஷா உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

திருத்தணி: கருக்கலைப்பு செய்த 17 வயது மாணவி உயிரிழப்பு - போலி பெண் டாக்டர் சிக்கிய பின்னணி!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் நர்சிங் படித்து வந்தார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சிறுவனும் காதலித்து வந்தனர். அந்த சிறுவன், மாணவிக்கு சகோதரர் உறவு முறையாக... மேலும் பார்க்க

சத்தீஸ்கர் வெள்ளம்: அடித்துச் செல்லப்பட்ட கார் - தமிழகத்தைச் சேர்ந்த ஒரு குடும்பமே பலியான துயரம்!

திருப்பத்தூர் மாவட்டம், பாரண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 43). இவரின் மனைவி பவித்ரா (40), மகள்கள் சௌஜைன்யா (8), சௌமையா (6). சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் கடந்த 15 ஆண்டுகளாக கட... மேலும் பார்க்க

கூடலூர்: போக்கு காட்டும் புலி, கேரளாவிலிருந்து பிரத்யேக கூண்டை வரவழைத்த வனத்துறை - என்ன நடக்கிறது?

நீலகிரி மாவட்டத்தில் மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் எதிர்கொள்ளல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த... மேலும் பார்க்க

மும்பை: 'தந்தையின் பாதை எனக்கு வேண்டாம்' - தாதா வரதராஜன் மகன் மோகன் மறைவு; தமிழ் அமைப்புகள் இரங்கல்

மும்பையில் வரதராஜன் முதலியார் இறந்த பிறகு அவரது மகன்கள் யாரும் அவரது வழியைப் பின்பற்றாமல் தங்களுக்குத் தனித்தனி வழியை ஏற்படுத்திக்கொண்டனர். அதில் மோகன் மட்டும் தொடர்ந்து மும்பையில் வாழ்ந்து வந்தார்.மு... மேலும் பார்க்க

விருதுநகர்: ஏலக்காய் தோட்டத்தில் கள்ளச்சாராயம், வனவிலங்கு வேட்டை; 6 பேர் கைதின் பின்னணி என்ன?

விருதுநகர் மாவட்டம் சேத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் சூரியன்கல் எஸ்டேட் அமைந்துள்ளது. இந்த எஸ்டேட்டில் ஏலக்காய், கிராம்பு உட்பட நறுமணப் பொருட்கள் விளைவிக்கப்படுகின்றன.இந்த எஸ்டேட்டை தேவதானத்தைச் சே... மேலும் பார்க்க

விஷப்பூச்சி கடித்து மாற்றுத்திறனாளி சிறுவன் உயிரிழப்பு - வேலூரில் அதிர்ச்சி!

வேலூர், விருப்பாட்சிபுரம் காந்தி நகரைச் சேர்ந்த முடிதிருத்தும் சலூன் தொழிலாளி ரமேஷ். இவரின் 13 வயது மகன் சஞ்சய், வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளி ஆவார். விநாயகர் சதுர்த்தியையொட்டி, நேற்று இரவு 8 மணியள... மேலும் பார்க்க