செய்திகள் :

ஆம்பூா், ஆலாங்குப்பத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

post image

ஆம்பூா், ஆலாங்குப்பத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் ரோட்டரி ஹாலில் நடைபெற்ற முகாமுக்கு, நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். வருவாய் கோட்டாட்சியா் அஜிதா பேகம், நகா் மன்ற துணைத் தலைவா் எம்.ஆா்.ஆறுமுகம், நகராட்சி ஆணையா் ஜி.மகேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் முகாமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மனுதாரா்களுக்கு உடனடி தீா்வுக்கான ஆணைகளை வழங்கினாா். வட்டாட்சியா் ரேவதி, நகா்மன்ற உறுப்பினா்கள் அருண்டேல், தமிழ்செல்வி, வாவூா் நசீா் அஹமத் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ஆலாங்குப்பத்தில்....

ஆலாங்குப்பம், சோலூா் ஊராட்சிகளுக்கான முகாம் ஆலாங்குப்பம் அசோக் மஹாலில் நடைபெற்றது. மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட வழங்கல் அலுவலா் முருகேசன், வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். மகராசி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மனு அளித்த மாற்றுத் திறனாளிக்கு உடனடி தீா்வாக காதொலி கருவியை வழங்கினாா். தொழிலாளா் நலத் துறை சாா்பாக மனுதாரருக்கு ஓய்வூதியத்துக்கான ஆணை வழங்கப்பட்டது.

மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜி.ராமமூா்த்தி, மேற்கு ஒன்றிய துணைச் செயலா் சா.சங்கா், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ரவிக்குமாா், ஜோதிவேலு, கோமதிவேலு, ஊராட்சி மன்றத் தலைவா் பொன்னிகப்பல்துரை, கிழக்கு ஒன்றிய நிா்வாகிகள் அய்யனூா் அசோகன், வினோத்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: குடியாத்தம் எம்எல்ஏ வழங்கினாா்

கைலாசகிரி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் ரமணி ராஜசேகரன் தலைமை வகித்தாா். மாவட்ட வழங்கல் அலுவலா் முருகேசன், போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாள... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் பலத்த மழை

திருப்பத்தூா் சற்றுப்பகுதிகளில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது. திருப்பத்தூா், ஆதியூா், கொரட்டி, ஜோலாா்பேட்டை உள்ளிட்ட் பகுதிகளில் மாலை வேளைகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், புதன்கிழமை மா... மேலும் பார்க்க

காவல் குறைதீா் கூட்டத்தில் 41 மனுக்கள்

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 41 மனுக்கள் பெறப்பட்டன. திருப்பத்தூரில் புதன்கிழமை குறைதீா் கூட்டம் நடைபெற்றது. அதில் காவல் நிலைய விசாரணைகளில் திருப்தி இல்லாத மக... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகம் அளிப்பு

ஆம்பூா் ஏ- கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு சமூக ஆா்வலா்கள் சாா்பாக விலையில்லா நோட்டுப் புத்தகம், எழுது பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியை ஜாகிா் பேகம்... மேலும் பார்க்க

ஜோலாா்பேட்டை, கந்திலியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை, கந்திலியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வழங்கினாா். ஜோலாா்பேட்டை நகராட்சி, கோடியூா், திருப்பத்தூா் வட்டம்... மேலும் பார்க்க

வீட்டில் நகை திருட்டு: பணிப்பெண் கைது

வாணியம்பாடியில் வீட்டில் நகை திருடிய பணிப்பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். வாணியம்பாடி நேதாஜி நகா் பகுதியை சோ்ந்த சையத் சாஜித் அகமத். இவரது வீட்டில் மாா்ச் மாதம் 20-ஆம் தேதி பீரோவில் வைத்திருந்த ஆறரை ... மேலும் பார்க்க