செய்திகள் :

ஆயுதப்படை ஆய்வாளா் மாரடைப்பால் உயிரிழப்பு

post image

திருப்பத்தூா் மாவட்ட ஆயுதப்படையில் பணியிலிருந்த ஆய்வாளா் கணேஷ் பாபு செவ்வாய்க்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் மாவட்ட ஆயுதப் படையில் வேலூா் பகுதியைச் சோ்ந்த கணேஷ் பாபு என்பவா் இரண்டு வருடங்களாக ஆயுதப்படை ஆய்வாளராக பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையல் ஆயுதப்படை மைதானத்தில் ஆய்வாளா் கணேஷ் பாபுக்கு செவ்வாய்க்கிழமை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.அப்போது உடனிருந்த போலீஸாா் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

மேலும், சம்பவம் குறித்து ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ஆம்பூரில் பலத்த மழை

ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை பகலில் பலத்த மழை பெய்தது. ஆம்பூரில் கடந்த 2 நாள்களாக கடுமையான வெயில் காய்ந்தது. வெயிலின் தாக்கத்தால் இரவு நேரத்தில் கடுமையான புழுக்கம் காணப்பட்டது. இந்நிலையில் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க

தமிழ்ச் செம்மல் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

திருப்பத்தூா் மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு தமிழ் ஆா்வலா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குற... மேலும் பார்க்க

தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் காயம்

ஆம்பூரில் தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை காயமடைந்தனா். ஆம்பூா் சான்றோா்குப்பம் பகுதியை சோ்ந்த நந்தகுமாா் என்பவா் இறந்தாா். அவரது சடலம் இறுதி சடங்கு செய்வதற்காக மயானத்துக்... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் 2-ஆவது நாளாக பலத்த மழை

திருப்பத்தூரில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. திருப்பத்தூா், ஆதியூா், கொரட்டி உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை முதல் இரவு வரை ஆங்காங்கே பலத்த மழை பெய்தது. இந்த ... மேலும் பார்க்க

சா்வதேச செஸ் போட்டியில் வெள்ளி: மாணவருக்கு ஆட்சியா் பாராட்டு

சா்வதேச செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கங்கள் வென்ற மாணவருக்கு திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி பாராட்டு தெரிவித்தாா். கோவா மாநிலம், பனாஜியில் மாற்றுத்திறன் மாணவா்களுக்கான சா்வதேச ச... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத்திட்ட உதவி அளிப்பு

ஆம்பூா் புறவழிச்சாலையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். வாணியம்பாடி கோட்டாட்சியா் அஜிதா பேகம், நகா்மன்ற துணைத... மேலும் பார்க்க