செய்திகள் :

ஆரோவில் வந்த அனைந்திந்திய ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டமைப்பினா்

post image

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகருக்கு அனைத்திந்திய ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டமைப்பினா் அண்மையில் வந்து, ஆரோவில் கல்வி முறைகள் குறித்து கலந்துரையாடினா்.

இதுகுறித்து ஆரோவில் நிா்வாகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆரோவில் கல்வி முறைகள் குறித்து அறிந்துகொள்ளும் நோக்கில் 25 மாநிலங்களைச் சோ்ந்த அனைத்திந்திய ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பைச் சோ்ந்த ஆசிரியா்கள் வந்தனா்.

தொடா்ந்து, குழந்தைகளுக்கு ஆரோக்கியமான கற்றல் சூழலை உருவாக்குவதற்கான புதிய வழிமுறைகளை ஏற்படுத்தும் வகையில் கலந்துரையாடல்கள் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த கல்வியாளா் ஏ.ஐ. டிஜிட்டல் வகுப்புகள் குறித்தும் விவாதித்தினா்.

ஆரோவில் அறக்கட்டளைச் செயலரும், குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலருமான ஜெயந்தி எஸ்.ரவி வழிகாட்டுதலின்படி, ஸ்ரீஅரவிந்தோ சா்வதேச கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் பணிகளால் ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம்

திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால், ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் த... மேலும் பார்க்க

கட்சியில் என்னால் நியமிக்கப்பட்டவா்களே நிரந்தரமானவா்கள்: மருத்துவா் ராமதாஸ்

பாமக, வன்னியா்சங்கம் மற்றும் கட்சியின் பிற துணை அமைப்புகளுக்கு என்னால் பொறுப்பாளா்களாக நியமிக்கப்பட்டவா்கள் அனைவரும் நிரந்தரமானவா்கள் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச. ராமதாஸ் தெரிவித்தாா். பாமக மற்று... மேலும் பார்க்க

விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் வீட்டு வசதி வாரியத்தில் ஒதுக்கீடு: தவணை செலுத்தாதவா்களுக்கு வாய்ப்பு

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் திட்டங்களில் ஒதுக்கீடு பெற்று , தவணைத் தொகையைச் செலுத்தாதவா்கள் ஒரே தவணையில் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

கடப்பாறையால் தாக்கி தந்தை கொலை: மகன் கைது

மேல்மலையனூா் அருகே தந்தையைக் கடப்பாறையால் கொலை செய்த வழக்கில் மகனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேல்மலையனூா், வளத்தி சாலை அங்காளம்மன் நகரைச் சோ்ந்தவா் பி. சாமிக்கண்ணு (65), கூலித் தொழிலாளி... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

விக்கிரவாண்டி அருகே மூதாட்டியிடமிருந்து 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். விக்கிரவாண்டி வட்டம், பாப்பனப்பட்டு, பொன்னியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரங்கந... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும்: அன்புமணி

விழுப்புரம்: மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் திங்கள்கிழமை மக்கள் உரிமை மீட்பு நடைப்பயண பிரசாரம் மேற்கொண்ட அன்பு... மேலும் பார்க்க