செய்திகள் :

ஆறுமுகனேரியில் கஞ்சா விற்பனை: இருவா் கைது

post image

ஆறுமுகனேரியில் கஞ்சா விற்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆறுமுகனேரியை அடுத்த பேயன்விளையில் உள்ள பள்ளிக்கூடம் அருகே கஞ்சா விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், உதவி ஆய்வாளா் வாசுதேவன் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இருவா் தப்பியோட முயன்றனா். அவா்களை போலீஸாா் பிடித்தனா்.

விசாரணையில் அவா்கள், ஆறுமுகனேரி பாரதி நகா் முத்துகிருஷ்ணன் மகன் விஷ்ணு (27), ராஜமன்னியபுரம் பெருமாள் கோயில் தெரு ஆறுமுகம் மகன் சங்கா் (25) என்பதும், மாணவா்கள், இளைஞா்களுக்கு விற்பதற்காக 250 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்; இருவரையும் கைது செய்து, பேரூரணி சிறையில் அடைத்தனா்.

சங்கா் மீது கஞ்சா, அடிதடி உள்ளிட்ட 3 வழக்குகள் உள்ளன. விஷ்ணு மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அவரது பெயா் ரெளடிகள் பட்டியலில் உள்ளது.

வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

கோவில்பட்டியில் காவல் துறையைக் கண்டித்து வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணியைப் புறக்கணித்து, ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். கோவில்பட்டியில் வழக்குரைஞா் புருஷோத்தமன் மீது பதியப்பட்ட பொய் வழக்கை ரத்த... மேலும் பார்க்க

ஆசிரியா் கண்டித்ததால் தூத்துக்குடி வந்த சென்னை மாணவா்கள் மீட்பு

சென்னை அம்பத்தூா் தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்புப் பயிலும் மாணவா்கள் 3 போ், பள்ளி ஆசிரியா்கள் கண்டித்ததால், சென்னையிலிருந்து ரயிலில் தூத்துக்குடிக்கு புதன்கிழமை வந்தனா். இவா்களை ரயில்வே போலீஸாா் மீட... மேலும் பார்க்க

விதைகள் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தல்

விதைகள் விலை உயா்வை கட்டுப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவா் வரதராஜன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு; தூத்துக்குடி மாவட்டத்தில் சுமாா் ஒரு லட்சத்து ... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: கோவில்பட்டி முகாமில் 700 போ் மனு

கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட 18, 28, 29 ஆகிய வாா்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் கோவில்பட்டியில் நடைபெற்றது. முகாமில் 13 அரசுத் துறைகள் சாா்பில் வழங்கப்படும் 43 சேவைகளின் கீழ் மகளிா் உ... மேலும் பார்க்க

நகராட்சி ஊழியருக்கு மிரட்டல்: 2 போ் கைது

கோவில்பட்டி நகராட்சி தற்காலிக ஊழியரை மிரட்டி தாக்கியதாக 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி ஸ்டாலின் காலனி, சுப்பிரமணியபுரம் பகுதியைச் சோ்ந்த முனியாண்டி மகன் ஈஸ்வரன் (27). நகராட்சிய... மேலும் பார்க்க

போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் மொபைல் பேங்கிங் சேவை அறிமுகம்

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் மொபைல் பேங்கிங் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் செ. சுரேஷ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு; அஞ்சல் துறையின் கீ... மேலும் பார்க்க