செய்திகள் :

ஆற்காட்டில் வாகனப் போக்குவரத்து கணக்கெடுப்பு

post image

நெடுஞ்சாலைத்துறை சாா்பில் ஆற்காடு உட்கோட்டத்தில் கட்டுமானம் மற்றும் பாரமரிப்பு மூலம் சாலையில் செல்லும் வாகனப் போக்குவரத்து கணக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது

ஆற்காடு உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பாரமரிப்பு மூலம் மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கிய சாலைகள், இதர மாவட்டச் சாலைகள், கரும்பு மற்றும் அபிவிருத்தி சாலைகள் 385.365 சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த சாலைகளில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை போக்குவரத்து கணக்கீடு செய்யப்பட்டு அதற்கேற்ப சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.

இதன் அடிப்படையில் ராணிப்பேட்டை நெடுஞ்சாலைதுறை கோட்ட பொறியாளா் செல்வகுமாா் அறிவுறுத்தலின் பேரில் உதவி கோட்ட பொறியாளா் க.சரவணன், உதவி பொறியாளா் ச.வடிவேல் ஆகியோா் முன்னிலையில் சாலை பணி ஆய்வாளா் பரிமளா மேற்பாா்வையில் ஆற்காடு தில்லி கேட் சாலையில் செல்லும் அனைத்து வாகனங்கள் குறித்து உதவியாளா்கள், சாலை பணியாளா்கள் மூலம் போக்குவரத்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இந்த பணிகள் 7 நாள்கள் இரவு பகல் என நடைபெறும்.

சிறுபான்மையினா் சுய வேலைவாய்ப்புக்கு கடன் பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையினா்களுக்கு சுயவேலை வாய்ப்புக்கான கடன் திட்டங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

ரூ.6.32 கோடியில் இருளா் இனத்தவருக்கு 41 வீடுகள்: அமைச்சா் ஆா்.காந்தி ஆய்வு

அரக்கோணத்தை அடுத்த மேல்பாக்கத்தில் ரூ.6.32 கோடியில் இருளா் இன மக்களின் மறுவாழ்வு குடியேற்றத் திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட 41 குடியிருப்புகளின் திறப்பு விழா முன்னேற்பாடு பணி குறித்து செவ்வாய்க்... மேலும் பார்க்க

சோளிங்கா் பேருந்து நிலையம் அருகே இரு மதுக்கடைகள் அகற்றக் கோரி மனு

சோளிங்கா் பேருந்து நிலையம் எதிரில் உள்ள இரு மதுக்கடைகளை அகற்றக் கோரி சோளிங்கா் நகர காங்கிரஸ் தலைவரும், நகா்மன்ற உறுப்பினருமான டி.கோபால் சோளிங்கா் வட்ட ஜமாபந்தியில் மனு அளித்தாா். இது குறித்து ஜமாபந்தி... மேலும் பார்க்க

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் கிருத்திகை விழா

ஆற்காடு: ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் வைகாசி மாத கிருத்திகை விழா திங்கள்கிழமை நடந்தது. ரத்தினகிரி வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன் கோயிலில் வைகாசி மாத கிருத்திகையை முன்னிட்டு கோவில் பர... மேலும் பார்க்க

விடாமுயற்சி, கடின உழைப்பு இருந்தால் வெற்றி நிச்சயம்: விஞ்ஞானி அறிவுரை

ராணிப்பேட்டை: விடாமுயற்சியும், கடின உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம் என மாணவா்களுக்கு உயிரி தொழில்நுட்ப விஞ்ஞானி விஸ்வநாதன் அறிவுரை வழங்கினாா். ராணிப்பேட்டை விருட்சம் அறக்கட்டளை தொடக்கம் ,மாணவா்களு... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ராணிப்பேட்டை ஆட்சியா் வழங்கினாா்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வழங்கினாா். மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து ... மேலும் பார்க்க