செய்திகள் :

ஆல்யா மானசாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மணிமேகலை!

post image

சின்ன திரை நடிகை ஆல்யா மானசாவுக்கு நடிகை மணிமேகலை இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதனை விடியோவாகப் பதிவு செய்து ரசிகர்களுடன் ஆல்யா மானசா பகிர்ந்துள்ளார்.

சின்ன திரையில் முன்னணி நடிகையான ஆல்யா மானசா, தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கு முன்பு சன் தொலைக்காட்சியில் இனியா தொடரில் நாயகியாக ஆல்யா நடித்திருந்தார்.

அந்தத் தொடருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிய தொடரில் ஆல்யா நடிக்கவுள்ளார்.

2017ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் நாயகியாக நடித்து சின்ன திரையில் அறிமுகமான ஆல்யா மானசா, அதில் உடன் நடித்த சக நடிகரான சஞ்சீவ் கார்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

2019-ல் இவர்களுக்குத் திருமணம் நடந்த நிலையில், இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். சிறிய இடைவேளைக்குப் பிறகு ராஜா ராணி பாகம் 2 தொடரிலும் ஆல்யா மானசா நடித்திருந்தார்.

இவரின் கணவர் சஞ்ஜீவ், குளிர், 6 அத்தியாயங்கள், சகாக்கள் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் ராஜா ராணி தொடரின் மூலமே ரசிகர்கள் மத்தில் பிரபலமானார்.

ஆல்யாவும் மணிமேகலையும்

இதனிடையே இவர்களின் நெருங்கிய தோழியான மணிமேகலை, தனது கணவருடன் ஆல்யா மானசாவின் வீட்டிற்குச் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத ஆல்யா, அன்றைய பொழுதை மிகவும் மகிழ்ச்சியாக பிடித்த நபர்களுடன் கழித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான விடியோவையும் சமூக வலைதளங்களில் ஆல்யா மானசா பகிர்ந்துள்ளார். அதில், மணிமேகலையுடன் சிரித்துப் பேசி அரட்டை அடிப்பதைப் போன்று உள்ளது. ஆல்யாவின் இரு குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டது மகிழ்ச்சிகரமானது என மணிமேகலையின் கணவர் உசேன் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க | மீண்டும் சின்னதிரையில் நடிக்கும் முன்னாள் மத்திய அமைச்சர்!

பளுதூக்குதல்: சாய்ராஜுக்கு வெண்கலம்

கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய ஜூனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் சாய்ராஜ் பர்தேசி செவ்வாய்க்கிழமை வெண்கலப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான 86 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற அவர், ஸ்னாட்ச் பிர... மேலும் பார்க்க

தென்னிந்திய கபடி: எஸ்ஆர்எம் பல்கலை. சாம்பியன்

மன்னார்குடி அருகே வடுவூர் மேல்பாதியில் நடைபெற்ற தென்னிந்திய ஆடவர் கபடிப் போட்டியில் சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழக அணி சாம்பியன் பட்டம் வென்றது. வடுவூர் மேல்பாதி ஏஎம்சி கபடி கழகம் சார்பில், தென்னிந்திய ... மேலும் பார்க்க

ரூ.2,306 கோடியாக உயர்ந்த ஆர்சிபி பிராண்ட் மதிப்பு

ஐபிஎல் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் பிராண்ட் மதிப்பு ரூ.2,306 கோடியாக அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நட்சத்திர வீரர் விராட் கோலி அங்கம் வகிக்கும் பெங்களூரு... மேலும் பார்க்க

மகளிர் ஒருநாள் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

இந்திய மகளிர் அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோதவுள்ள இங்கிலாந்து மகளிர் அணி, 15 பேருடன் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய மகளிர் அணி, தற்போது டி20 தொடரில் விளைய... மேலும் பார்க்க

சின்னா், ஜோகோவிச் வெற்றி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரா்களான இத்தாலியின் யானிக் சின்னா், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோா் ரவுண்ட் ஆஃப் 16-இல் வென்று காலிறுதிக்கு தகுதிபெற்றனா். ஆடவா் ஒற்றையா் காலிறுதிக்கு முந... மேலும் பார்க்க

நாளை முதல் அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி

அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டி வியாழக்கிழமை (ஜூலை 10) தொடங்கி, வரும் 20-ஆம் தேதி வரை சென்னை மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இப... மேலும் பார்க்க