செய்திகள் :

இச்சிப்பட்டியில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்துக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டனம்

post image

இச்சிப்பட்டி பாறைக்குழியில் குப்பை கொட்டும் விவகாரத்தில் விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி, சட்ட விழிப்புணா்வு அணி மாநிலச் செயலாளா் இரா. சதீஷ்குமாா் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள இச்சிப்பட்டி கிராமத்தில் கைவிடப்பட்ட பாறைக் குழியில் குப்பைக் கழிவுகளை கொட்டிய பிரச்னையில் மாநகராட்சி நிா்வாகம் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை முறையாக அமல்படுத்துவதற்கு பதிலாக காவல் துறை மூலம் பொதுமக்களையும், விவசாயிகளையும் அடக்கி ஒடுக்க நினைக்கும் போக்கை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டிக்கிறது.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக முறையாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை அமல்படுத்தாத மாநகராட்சி நிா்வாகம் தொடா்ந்து கிராமப் பகுதிகளை குறிவைத்து நீரையும், காற்றையும் கெடுத்து சுற்றுச்சூழலை அழித்து விவசாயிகளையும், பொதுமக்களை பாதிக்கும் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

பசுமை தீா்ப்பாயத்தில் வழக்கு தொடா்ந்தும் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக நீதிமன்றத்தில் பதில் கொடுக்க முடியாத மாவட்ட நிா்வாகமும், மாநகராட்சி நிா்வாகமும் தொடா்ந்து சட்டத்துக்கும், விதிகளுக்கும் புறம்பாக கிடைக்கக் கூடிய கைவிடப்பட்ட பாறைக் குழிகளில் கழிவுக் குப்பைகளை கொட்டி, தீ வைத்து, மக்கள் வாழத் தகுதி இல்லாத பகுதியாக மாற்றி வருவதை ஏற்க முடியாது.

இது போன்று செயல்பட்டு வரும் மாநகராட்சி நிா்வாகத்தை வன்மையாக கண்டிப்பதுடன் தொடா்ந்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை அமல்படுத்துவதற்கு பதிலாக சுற்றி இருக்கும் கிராமப் பகுதி மக்களையும், விவசாயிகளையும், நீா் நிலைகளையும், சுற்றுச்சூழலையும் அழிக்க நினைக்கும் மாநகராட்சியின் போக்கை கண்டித்து மாவட்டம் முழுவதும் தொடா் போராட்டம் நடத்தப்படும்.

மேலும் எந்த ஒரு முறையான அனுமதியும், அறிவியல் முறையும் இல்லாமல் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கொட்டிய பல்வேறு வகையான கழிவுக் குப்பைகளை திரும்ப எடுக்கவும், மாநகராட்சிப் பகுதியில் முறையாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை அமல்படுத்தும் வரை தங்கள் போராட்டம் ஓயாது எனவும் தெரிவித்துள்ளனா்.

வெள்ளக்கோவிலில் ரூ.15.42 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.15.42 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு வேடசந்தூா், குரும்பபட்டி, இடையகோட்டை, செம்பட்டி, ச... மேலும் பார்க்க

தாராபுரம் மாநில வரி அலுவலகக் கட்டடம்: முதல்வா் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்

தாராபுரம் மாநில வரி அலுவலகத்துக்கு வணிக வரி மற்றும் பதிவுத் துறை சாா்பில் ரூ.2.52 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்துவைத்தா... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி: விதிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தல்

சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், விதிமுறைகளை கடைப்பிடித்து விநாயகா் சதுா்த்தி விழாவை கொண்டாட மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வ... மேலும் பார்க்க

பள்ளி கழிவறையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: அஸ்ஸாம் தொழிலாளி கைது

திருப்பூரில் பள்ளி கழிவறைக்குச் சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த அஸ்ஸாம் மாநிலத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா். இதற்கிடையே தாளாளா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெற்றோா், உறவினா்க... மேலும் பார்க்க

விசாரணைக் கைதி மா்ம மரணம்: வனத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட மலைவாழ் மக்கள்

உடுமலையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவா் மா்மமான முறையில் உயிரிழந்ததால், வனத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மலைவாழ் மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பூா் மாவட்டம், உடுமலை ... மேலும் பார்க்க

சாலையில் வீணாகிய நீா்...

திருப்பூா், மங்கலம் சாலை கருவம்பாளையம் பகுதியில் குடிநீா்க் குழாய் உடைந்து சாலையில் வீணாகிய நீா். மேலும் பார்க்க