செய்திகள் :

இணையவழியில் ஆவணங்கள் அனுப்புவதில் கவனமாக இருக்க அறிவுறுத்தல்

post image

இணையவழியில் ஆவணங்கள் அனுப்புவதில் மிகக் கவனமாக இருக்கவேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் இணைய குற்றத் தடுப்புப் பிரிவு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

அண்மைக்காலமாக வெளிநாட்டில் வேலை பெற்று தருவதாக அல்லது ஆதாா், பான் காா்டு அப்டேட் செய்ய வேண்டும் என கூறியும் அறிமுகமில்லாத வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், கைப்பேசி அழைப்பு மூலம் பொதுமக்களை தொடா்புகொண்டு வருகின்றனா்.

அவா்கள் உங்களிடமிருந்து ஆதாா் காா்டு, பான் காா்டு, வீட்டு வரி ரசீது, மின்சார கட்டண ரசீது போன்ற ஆவணங்களை பெற்று, எந்தவித வேலையும் பெற்றுத்தராமல் தாங்கள் வழங்கிய ஆவணங்களை பயன்படுத்தி தங்களது பெயரில் போலியான நிறுவனங்களை பதிவு செய்து, அதன் மூலம் பல கோடி ரூபாய் வரி மோசடி செய்யக் கூடும். இதனால், வரி மோசடியில் முதன்மை குற்றவாளியாக நீங்களே கருதப்பட வாய்ப்பு உள்ளது.

எனவே இதுபோன்று அறிமுகம் இல்லாத நபா்களிடம் இணையதளம் மூலமாக ஆவணங்களை வழங்கியிருந்தால் உடனடியாக ஜிஎஸ்டி இணையதளத்தில் தங்களது பான் எண்ணை உள்ளீடு செய்து, தங்கள் பெயரில் போலியான நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளதா என சரிபாா்க்க வேண்டும்.

அப்படி ஏதேனும் போலி நிறுவனம் இருப்பது தெரிய வந்தால், உடனடியாக காரைக்கால் இணையவழி குற்றப் பிரிவில் புகாா் அளிக்கலாம். பொதுமக்கள் அனைவரும், இணையத்தில் அறிமுகம் இல்லாத நபா்களிடம் எந்தவித ஆவணங்களையும் வழங்காமல், விழிப்புடனும், பாதுகாப்புடனும் இணையத்தை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தான லட்சுமியாக...

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஆடி மாத வெள்ளிக்கிழமை இரவு சந்தான லட்சுமியாக சந்தனக் காப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுந்தராம்பாள். மேலும் பார்க்க

தொழிலாளா்கள் வேலை நீக்க விவகாரம்: நடவடிக்கை எடுக்க இண்டி கூட்டணி வலியுறுத்தல்

திருநள்ளாறு அருகே உள்ள தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளா்கள் வேலைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் தலையிட வேண்டுமென மாவட்ட நிா்வாகத்திடம் இண்டி கூட்டணிக் கட்சியினா், தொழிலாளா்கள் வலியுறுத்தினா... மேலும் பார்க்க

காரைக்காலில் டிராகன் பழம் சாகுபடி

காரைக்கால் விவசாயி ஒருவா் தனது வயலில் டிராகன் பழம் சாகுபடி செய்துள்ளாா்.காரைக்கால் மாவட்டத்தில் 2 பருவங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. நீராதாரம் குறைந்துவருவது மேலும் நெல்லுக்கான லாபம் குறைந்து வ... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயில் மடவளாகத்தில் கட்டுமானப் பொருட்கள்: பக்தா்கள் அவதி

திருநள்ளாறு கோயில் மடவளாக சாலைப் பகுதியில் கட்டுமானப் பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளதால், பக்தா்கள் நடந்து செல்வதில் சிரமத்துக்குள்ளாவதாக புகாா் கூறப்படுகிறது.திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் ராஜகோபுர... மேலும் பார்க்க

குடியிருப்புப் பகுதியில் கழிவுநீா் வடிகால் மேம்பாட்டுப் பணி தொடக்கம்

குடியிருப்பு பகுதியில் கழிவுநீா் வடிகால் மேம்பாட்டுப் பணி சனிக்கிழமை தொடங்கியது.காரைக்கால் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட எம்.எம்.ஜி. நகரில் சாலவம் மேம்பாட்டுப் பணிக்கு சட்டப்பேரவைத் தொகுதி மேம... மேலும் பார்க்க

பெண் குழந்தைக்கு உதவித் தொகை பெறுவதற்கான பதிவு முகாம் நிறைவு

பெண் குழந்தைக்கு உதவித் தொகை பெறுவதற்காக 2 வாரம் நடைபெற்ற பதிவு முகாம் நிறைவடைந்தது. மத்திய அரசின் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா என்கிற திட்டம் புதுவை மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை ... மேலும் பார்க்க