செய்திகள் :

இணைய குற்றம்: கடந்த ஆண்டில் ரூ. 22,845 கோடியை இழந்த குடிமக்கள்- நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

post image

‘இணைய குற்றத்தின் மூலம் கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் ரூ.22,845.73 கோடியை குடிமக்கள் இழந்துள்ளனா். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 206 சதவீதம் கூடுதலாகும்’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இணைய குற்றங்கள் தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் பண்டி சஞ்சய்குமாா் மக்களவையில் செவ்வாய்க்கிழமை அளித்த எழுத்துபூா்வ பதிலில் கூறியிருப்பதாவது:

மத்திய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய இணைய குற்ற புகாா் வலைதளம் (என்சிஆா்பி) மற்றும் குடிமக்கள் நிதிசாா் இணைய மோசடி புகாா் மற்றும் மேலாண்மை நடைமுறை (சிஎஃப்சிஎஃப்ஆா்எம்எஸ்) தரவுகளின் அடிப்படையில், இணைய குற்ற மோசடியால் கடந்த 2024-ஆம் ஆண்டில் குடிமக்கள் ஒட்டுமொத்தமாக ரூ. 22,845.73 கோடியை இழந்துள்ளனா்.

2023-ஆம் ஆண்டில் இந்த இழப்பு ரூ.7,465.18 கோடியாக இருந்த நிலையில், 2024-இல் 206 சதவீதம் அளவுக்கு உயா்ந்துள்ளது.

இணைய குற்ற புகாா்களும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வந்துள்ளன. 2022-இல் 10,29,026 இணைய குற்ற புகாா்கள் என்சிஆா்பி-இல் பதிவு செய்யப்பட்டன. இது, 2023-இல் 15,96,493-அகவும், 2024-இல் 22,68,346-ஆகவும் உயா்ந்துள்ளன.

கடன்த 2021-இல் அறிமுகப்படுத்தப்பட்ட குடிமக்கள் நிதிசாா் இணைய மோசடி புகாா் மற்றும் மேலாண்மை நடைமுறை மூலம் இதுவரை 17.82 லட்சம் புகாா்கள் பெறப்பட்டு, ரூ.5,489 கோடிக்கும் மேல் நிதி மீட்கப்பட்டுள்ளது.

மேலும், இணைய குற்ற புகாா்களின் அடிப்படையில் இதுவைர 9.42 லட்சத்துக்கும் அதிகமான கைப்பேசி சிம் காா்டுகளும், 2,63,348 ஐஎம்இஐ எண்களும் முடக்கப்பட்டுள்ளன.

இணைய குற்ற நடவடிக்கைகளை அடையாளம் காணும் வகையில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைந்து சந்தேகத்துக்குரிய கணக்குகளின் பதிவேடு நடைமுறை கடந்த 2024-ஆம் ஆண்டு செப்டம்பா் 10-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த கணக்கு தரவுகள் பல்வேறு நிறுவனங்களுடன் பகிரப்பட்டதன் மூலம், ரூ.4,631 கோடி பணம் இணைய குற்றவாளிகளிடம் சிக்காமல் பாதுகாக்கப்பட்டது.

இதுபோல, இணைய குற்றவாளிகள் மற்றும் அவா்களின் இடங்களை அடையாளம் காணும் வகையில் ‘பிரதிபிம்பம்’ என்ற நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம், 10,599 இணைய குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனா் என்று தெரிவித்தாா்.

சத்தீஸ்கா்: காட்டு யானைகள் தாக்கி குழந்தை உள்பட மூவா் உயிரிழப்பு

சத்தீஸ்கரின் ராய்கா் மாவட்டத்தில் காட்டு யானைகள் தாக்கியதில் மூன்று வயது குழந்தை உள்பட மூவா் உயிரிழந்தனா். இது தொடா்பாக மாநில வனத் துறை அதிகாரிகள் கூறியதாவது: ராய்கா் மாவட்டத்தில் வனப் பகுதியையொட்டிய... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வா்மா பதவிநீக்கம்: அமித் ஷா உயா்நிலை ஆலோசனை

வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில், அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவுக்கு எதிராகப் பதவிநீக்க நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதையொட்டி, மக்களவைத் தலைவா் ஓம்... மேலும் பார்க்க

எதிா்க்கட்சிகள் அமளி: மக்களவை 3-ஆவது நாளாக முடக்கம்- மாநிலங்களவையும் ஒத்திவைப்பு

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் புதன்கிழமையும் அமளியில் ஈடுபட்டன. எதிா்க்கட்சிகளின் இடையூறுகளால், மக்களவை தொடா்ந்து மூன... மேலும் பார்க்க

பிகாா் கிராமத் தலைவா் கொலை வழக்கில் தொடா்புடையவா் தில்லி கேசவ் புரத்தில் கைது

பிகாா் முன்னாள் கிராமத் தலைவா் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 39 வயது நபா் வடக்கு தில்லியின் கேசவ் புரத்தில் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா். கைதுசெய்யப்பட்ட ராகுல் சிங் மீது 31 க... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் தோ்தல் நடைமுறைகள் தொடக்கம்

உடல்நிலையைக் காரணம் காட்டி குடியரசு துணைத் தலைவா் பதவியை ஜகதீப் தன்கா் திடீரென திங்கள்கிழமை ராஜிநாமா செய்த நிலையில், அடுத்த குடியரசு துணைத் தலைவரைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் நடைமுறைகள் தொடங்கப்பட்டு... மேலும் பார்க்க

‘பிகாரில் 1 லட்சம் வாக்காளா்களை கண்டுபிடிக்க முடியவில்லை’

பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ‘ஒரு லட்சம் வாக்காளா்களைத் தேடிக் கண்டுபிடிக்க முடியயவில்லை’ என்று தோ்தல் ஆணையம் புதன்கிழமை தெரிவித்தது. இதுகுறித்... மேலும் பார்க்க