செய்திகள் :

இந்தியாவுடன் வலுவான நட்புறவு! பயங்கரவாதத்துக்கு டென்மார்க் கண்டனம்

post image

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, பயங்கரவாதத்துக்கு எதிராக டென்மார்க் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, இந்தியாவுக்கான டென்மார்க் தூதர் ராஸ்மஸ் அபில்ட்கார்ட் கிறிஸ்டென்சன் தெரிவித்ததாவது, இந்தியாவின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலையடுத்து, இந்திய அரசுக்கும் மக்களுக்கும் தனது அனுதாபத்தையும் இரங்கலையும் வெளிப்படுத்திய முதல் நாடுகளில் டென்மார்க்கும் ஒன்றாகும்.

பயங்கரவாதம் எங்கு நிகழ்த்தப்பட்டாலும், அதற்கு எதிராக டென்மார்க் இருப்பதை இந்திய அரசுக்கு நாங்கள் தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளோம். ஐ.நா. அவையிலும் இதனைத் தெளிவுப்படுத்தியுள்ளோம். இந்தியாவுடன் மிகவும் வலுவான நட்புறவை டென்மார்க் கொண்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில் இருவரும் சேர்ந்து பசுமை கூட்டாண்மையை நிறுவினோம். தொழில்நுட்பத் துறையில், டென்மார்க் வழங்கும் பரந்த திறன்களையும் இந்தியா பயன்படுத்திக் கொள்ளலாம்.

பசுமை மாற்றம், எரிசக்தி, நீர், விவசாயம் மற்றும் அதனை எவ்வாறு நிலையானதாக மாற்றுவது என்பதில் எங்களுக்கு நிறைய அனுபவம் உள்ளது, இந்தியா, ஏற்கெனவே அதிக முன்னேற்றம் அடைந்து வருகிறது என்று கூறினார்.

திரிபுராவில் 3 மணி நேரத்தில் 200 மி.மீ. மழை!

திரிபுரா தலைநகா் அகா்தலாவில் சனிக்கிழமை இரவு 3 மணி நேரத்தில் 200 மி.மீ. மழை கொட்டித் தீா்த்தது. இதையடுத்து, நகரின் பல பகுதிகளில் தண்ணீா் சூழ்ந்தது.முதல்வா் மாணிக் சாஹாவின் வீட்டு முன் முழங்கால் அளவு வ... மேலும் பார்க்க

ஆளும் பாஜக மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

மதாரஸி கேம்ப் இடிக்கப்பட்ட விவகாரத்தைத் தொடா்ந்து, ஆளும் பாஜக அரசை ஆம் ஆத்மி தலைவா்கள் கடுமையாக விமா்சித்துள்ளனா். எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில்... மேலும் பார்க்க

புகையிலை பொருள்கள் தயாரிப்போா் விதிமீறல்: மத்திய அரசுக்கு பசுமைத் தீா்ப்பாயம் நோட்டீஸ்

புகையிலை, குட்கா, பான் மசாலா பொருள்களைத் தயாரிப்போா் விதிமீறலில் ஈடுபடுவது தொடா்பாக மத்திய அரசுக்கு தேசிய பசுமைத் தீா்ப்பாயம் (என்ஜிடி) நோட்டீஸ் அனுப்பியது. புகையிலை, குட்கா, பான் மசாலா பொருள்களைத் த... மேலும் பார்க்க

பிரான்ஸ், இத்தாலிக்கு 5 நாள்கள் பயணம் தொடங்கினாா் பியூஷ் கோயல்

பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளுக்கான ஐந்து நாள்கள் அரசுமுறைப் பயணத்தை மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினாா். இப்பயணத்தின் முதல் கட்டமாக பிரான்ஸ் நாட்டு... மேலும் பார்க்க

முப்படை தலைமைத் தளபதி பேச்சு எதிரொலி: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை உடனடியாக நடத்த காங்கிரஸ் வலியுறுத்தல்

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதல் குறித்து முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சௌஹான் பல்வேறு தகவல்களைத் தெரிவித்துள்ள நிலையில், ராணுவம் மற்றும் வெளியுறவுக் கொள்கை உத்தி தொடர்பாக விவாதிப்பதற்கு நாடாளுமன... மேலும் பார்க்க

வெள்ளத்தில் தத்தளிக்கும் வடகிழக்கு மாநிலங்கள் -மீட்புப் பணிகள் தீவிரம்

குவாஹாட்டி/இடாநகா்: அஸ்ஸாம், அருணாசல பிரதேசம், மணிப்பூா், சிக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள், தொடா் கனமழையால் வெள்ளக்காடாக மாறியுள்ளன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவ... மேலும் பார்க்க