செய்திகள் :

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கான பாதுகாப்பு அதிகரிப்பு!

post image

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு வழங்கப்பட்டு வரும் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பானது மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களினால் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதனால், இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் கடுமையான ராணுவ மோதல்கள் நடைபெற்றன.

இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் தற்போது முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதுகுறித்து வெளிநாடுகளின் தலைவர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து விளக்கி வருகின்றார்.

இந்நிலையில், அமைச்சர் ஜெய்சங்கருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்புகள் குறித்து மத்திய புலனாய்வு அமைப்புகள் மதிப்பாய்வு செய்தனர். அவர்களின் பரிந்துரைகளின்படி அவருக்கு வழங்கப்பட்ட ‘இசட்’ பிரிவு பாதுகாப்புப் பேரணியில் புதியதாக தற்போது இரண்டு குண்டு துளைக்காத வாகனங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன்மூலம் அவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பானது மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2023-ம் ஆண்டு அமைச்சர் ஜெய்சங்கரின் பாதுகாப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட இதேபோன்ற மதிப்பாய்வின் மூலம் அவருக்கு வழங்கப்பட்ட ‘வொய்’ பிரிவு பாதுகாப்பு ‘இசட்’ பிரிவாக உயர்த்தப்பட்டது.

மத்திய ரிசர்வ் காவல் படையின் விஐபி பாதுகாப்பு பிரிவினர் அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

இந்தப் பிரிவைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்பட 200 முக்கிய நபர்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 2 வது முறையாக அதிபர் டிரம்ப்பை சந்திக்கும் முகேஷ் அம்பானி!

ஆபரேஷன் சிந்தூர்: காங்கிரஸ் கேள்வி; பாஜக பதில்

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை புதன்கிழமை எழுப்பியது.இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டது ஏன்?, எந்த வி... மேலும் பார்க்க

ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கலாம்: உச்சநீதிமன்றம்

நமது நிருபர்ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சர்களை நியமிக்கலாம் என உச்சநீதிமன்றம் புதன்கிழமை கூறியது. அதேவேளையில், ஆகம விதிகள் கடைப்பிடிக்கப்படும் கோயில்களை மூன்று மாதங்களுக்குள் கண்டறிய அதற்காக அமைக்கப... மேலும் பார்க்க

பாதசாரிகளுக்கு நடைபாதை: மாநில அரசுகள் வழிகாட்டுதல்களை வகுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

பாதசாரிகள் நடந்து செல்ல முறையாக நடைபாதைகள் இருப்பதை உறுதி செய்வதற்கு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. நடைபாதைகளில் ஆக்... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கிறிஸ்தவா்கள் வெளியேற்றம்: மனித உரிமைகள் ஆணையம் கவலை

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நிலஅபகரிப்பு கும்பலால் சிறுபான்மையினரான கிறிஸ்தவா்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, அவா்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருவது குறித்து அந்நாட்டு மனித ... மேலும் பார்க்க

‘அவசியமற்ற இடைவேளைகள் எடுக்கும் உயா்நீதிமன்ற நீதிபதிகள்’- செயல்திறன் தணிக்கைக்கு உச்சநீதிமன்றம் அழைப்பு

உயா்நீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவ்வப்போது புகாா்கள் வருவதாகவும், சிலா் பணிநேரங்களில் அவசியமற்ற இடைவேளைகளை எடுப்பதாகவும் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அதிருப்தி தெரிவித்தது. மேலும், ‘உயா்நீதிமன்ற நீ... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி எதிரொலி: துருக்கியுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் ரத்து

துருக்கியின் இனோனு பல்கலைக்கழகத்துடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு இந்த ந... மேலும் பார்க்க