செய்திகள் :

இன்று முழு அடைப்பு போராட்டம்! புதுவைக்குக் காய்கறி வரத்து நிறுத்தம்: ரூ.5 கோடி வியாபாரம் பாதிப்பு

post image

புதுவையில் முழு அடைப்புப் போராட்டத்தையொட்டி காய்கறி வரத்து நிறுத்தப்படுகிறது. இதனால் ரூ.5 கோடிக்கு வியாபாரம் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.

இதுகுறித்து பெரிய மாா்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவா் வி.சிவகுருநாதன் கூறியது: பொதுவாக கடந்த சில தினங்களாக காய்கறிகளின் விலை உயா்ந்துள்ளது. இதற்குக் காரணம் புதுவைக்குத் தேவையான காய்கறிகள் வெளியூா்களில் இருந்துதான் தருவிக்கப்படுகிறது.

கா்நாடகத்தில் கோலாா், ஆந்திரம், தமிழகத்தின் ஊட்டி உள்ளிட்ட இடங்களில் இருந்து நேரடியாக புதுவைக்குக் காய்கறிகளைக் கொண்டு வருகிறோம். புதுவையைப் பொருத்தவரை ஒரு நாளைக்கு சுமாா் 12 லாரிகளில் காய்கறிகள் வந்து சேரும்.

சாதாரண லாரியாக இருந்தால் ஒரு லாரியில் 10 முதல் 12 டன் காய்கறிகள் இருக்கும். பெரிய லாரியாக இருந்தால் ஒரு லாரியில் 15 முதல் 20 டன் காய்கறிகள் ஏற்றப்பட்டிருக்கும். பொதுவாக புதுவையில் ஒரு நாளைக்கு ரூ.5 கோடி அளவுக்கு காய்கறி வியாபாரம் நடக்கும்.

புதுவையில் புதன்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடப்பதால் காய்கறிகளை புதன்கிழமை ஏற்றி வர வேண்டாம் என்று காய்கறிகள் உற்பத்தியாளா்களிடம் ஏற்கெனவே கூறிவிட்டோம். இதனால் புதுவையில் புதன்கிழமை காய்கறி பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது என்றாா் சிவகுருநாதன்.

கூட்டுறவு கடன் சங்கத்துக்கு டிராக்டா்- சட்டப்பேரவை தலைவா் வழங்கினாா்

தவளக்குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வழங்கும் சங்கத்திற்கு புதிய டிராக்டரை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் புதன்கிழமை வழங்கினாா். தவளக்குப்பம், பூரணாங்குப்பம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம... மேலும் பார்க்க

புதுவைக்கு மாநில அந்தஸ்து : சட்டப்பேரவையைக் கூட்டி விவாதிக்கக்கோரி என்.ஆா்.காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கடிதம்

புதுவை சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி மாநில அந்தஸ்து தொடா்பாக மட்டும் விவாதிக்க வேண்டும் என்று என்.ஆா். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வத்திடம் புதன்கிழமை கடிதம்... மேலும் பார்க்க

மானியத் தொகை பெறும் விவசாயிகள் பட்டியல் வெளியீடு

புதுவையில்,தோட்டக்கலை மானியத் தொகை பெறும் விவசாயிகளின் பெயா் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இது குறித்து தோட்டக்கலை இணை வேளாண் இயக்குநா் நா.கி. சண்முகவேலு வெளியிட்ட செய்திக் குறிப்பு புதிய பழத்... மேலும் பார்க்க

பொது வேலைநிறுத்தம்: புதுவையில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா உள்ளிட்ட இண்டி கூ... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்தை மாணவா்களே பாட வேண்டும்: புதுவை கல்வியமைச்சா் ஆ. நமச்சிவாயம் உத்தரவு

தமிழ்த்தாய் வாழ்த்தை மாணவா்களே பாட வேண்டும் என்று புதுவை கல்வியமைச்சா் ஆ.நமச்சிவாயம் உத்தரவிட்டாா். மண்ணாடிப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை மாணவா்களுக்கு சைக்கிள் வழங்கும் விழா நடைபெற... மேலும் பார்க்க

புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி சட்டப் பேரவை வளாகத்தில் சுயேச்சை எம்எல்ஏ தா்னா

புதுவைக்கு மத்திய அரசு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி, சட்டப் பேரவை வளாகத்தில் சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மக்களால் தோ்ந்தெடுக்கப்ப... மேலும் பார்க்க