செய்திகள் :

"இப்போதுதான் உயிரே வந்தது; அவரை கேரளாவிற்கு அழைத்து வருவோம்"- கேரள நர்ஸ் நிமிஷாவின் கணவர் பேட்டி

post image

ஏமனில் தன்னுடைய நண்பரும், தொழில் ரீதியான கூட்டாளியாகவும் இருந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரின் கொலை வழக்கில், கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு நாளை (ஜூலை 16) நிறைவேற்றப்பட இருந்த, மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்தவர், நிமிஷா பிரியா. தற்போது 35 வயதாகும் இவர், தொடுபுழாவைச் சேர்ந்த டாமி தாமஸ் என்பவரை திருமணம் செய்தார். அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. டோமி தாமஸ் தனது மகளுடன் தற்போது கேரளாவில் வசிக்கிறார்.

ஏமன் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிமிஷா பிரியா

ஏமனில் நிமிஷாவின், தொழில் ரீதியான கூட்டாளியாக இருந்த தலால் அப்தோ மஹ்தி என்பவர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தன்னைக் கொடுமைப்படுத்தியதாகக் நிமிஷா தரப்பில் கூறப்படுகிறது. மஹ்தியிடமிருந்து தப்பிப்பதற்காக, 2017 ஜூலை 25-ம் தேதி அவருக்கு மயக்க மருந்து கொடுத்துள்ளார் நிமிஷா. மயக்க மருந்து ஓவர் டோஸ் ஆனதால் தலால் அப்துல் மஹ்தி மரணமடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் 2020-ல் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தன்னை கொடுமைப்படுத்தியதால்தான் கொலை செய்ததாக நிமிஷா பிரியா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டும், அதை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்நிலையில் நிமிஷா பிரியாவுக்கு நாளை நிறைவேற்றப்பட (ஜூலை 16) இருந்த, மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. நிமிஷாவின் குடும்பத்தினர் இந்திய அரசின் மூலம் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்தும் அது கைகூட வில்லை.

இந்தச் சூழலில் இந்தியாவைச் சேர்ந்த மூத்த இஸ்லாமியத் தலைவர் அபுபக்கர் முஃப்தி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியதால் தற்காலிகமாக தேதி அறிவிக்கப்படாமல் நிமிஷாவின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், மஹ்தியின் குடும்பத்தினர் பிளட் மணி எனப்படும் தொகையைப் பெற்றுக் கொண்டு நிமிஷாவை மன்னிக்க ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

அபுபக்கர் முஃப்தி

ஏமன்: கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறுத்திவைப்பு; காரணம் இதுதான்!

இதுகுறித்து பேசியிருக்கும் நிமிஷாவின் கணவர் டோமி தாமஸ், "நிமிஷாவின் மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது நல்ல செய்தி. எங்களுக்கெல்லாம் இப்போதுதான் உயிரே வந்தது. இன்னும் கடுமையாக முயற்சி செய்து விரைவில் நிமிஷாவை இங்கு கேரளா அழைத்துவருவோம்." என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

ITR Filing: வருமான வரி தாக்கலில் லேட்டஸ்ட் அப்டேட்டுகள் என்னென்ன? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

வருமான வரி தாக்கல் காலம் இது. இந்த ஆண்டு, எளிமையான புதிய ஐ.டி.ஆர் படிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கேற்ப ஐ.டி.ஆர் போர்ட்டலும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்த ஆண்டு புதுப்புது மாற்றங்கள... மேலும் பார்க்க

பாமக 37-ஆம் ஆண்டு விழா: "ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம்" - அன்புமணி ராமதாஸ் உறுதி

ராமதாஸ் - அன்புமணி மோதல் விவகாரம் முடிவுறாத கதையாகநீண்டுகொண்டிருக்கிறது. இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்த வண்ணமிருக்கிறார்கள்.இதற்கிடையில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி க... மேலும் பார்க்க

Air India Crash : `விடை தெரியாத கேள்விகள்' - AAIB அறிக்கையும் விமர்சனங்களும் - என்ன நடக்கிறது?

குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் ட்ரீம்லைனர் ரக விமானம் கடந்த மாதம் 12-ம் தேதி புறப்பட்டு சென்றது. ஓடு பாதையில் இருந்து வானில் பறந்த விமானம் திடீரென கீழே இற... மேலும் பார்க்க

திருச்சி: பயன்பாட்டுக்கு வந்த `பஞ்சப்பூர் பேருந்து நிலையம்'; வெளியூர், நகர் பேருந்துகள் இயக்கம்

திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் 115.68 ஏக்கரில், ரூ.408 கோடி மதிப்பில் ஏசி, லிஃப்ட், எஸ்கலேட்டர் என பல வசதிகளுடன் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை கடந்த மே மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்த... மேலும் பார்க்க

ஏமன்: கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறுத்திவைப்பு; காரணம் இதுதான்!

ஏமனில் தன்னுடைய நண்பரும், தொழில் ரீதியான கூட்டாளியாகவும் இருந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரின் கொலை வழக்கில், கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு நாளை (ஜூலை 16) நிறைவேற்றப்பட இருந்த, மரண தண்டனை நிறுத்தி வ... மேலும் பார்க்க

திருக்குறளே இல்லாத ஒன்றை 'குறள்'னு சொல்லி போட்டு இருக்காங்க! - ராஜ் பவன் மீது தமிழறிஞர்கள் வேதனை

தேசிய மருத்துவர் தினத்தையொட்டி சென்னை ராஜ் பவனில் கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் நடந்த விழாவில், மருத்துவர்களுக்கு வழங்கிய சான்றிதழில், இல்லாத ஒன்றை குறள் என அச்சிட்டு வழங்கியது புது சர்ச்சையைக் கிளப்ப... மேலும் பார்க்க