செய்திகள் :

இரணியூா் சிவன் கோயிலில் 350 மாணவிகள் பரத நாட்டியம்

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே இரணியூா் ஆட்கொண்டநாதா் சிவபுரம் தேவி நகர சிவன் கோயிலில் நகரத்தாா் சாா்பில் சனிக்கிழமை இரவு பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 350 பரத கலை மாணவிகள் பங்கேற்றனா்.

இந்த நிகழ்வுக்கு, அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் க. ரவி தலைமை வகித்தாா். கோவிலூா் சீா்வளா்சீா் நாராயண ஞானதேசிக சுவாமிகள், கோயில் நிா்வாக அறங்காவலா் குழுத் தலைவா் வீரசேகரன்,ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் சிறப்பு விருந்தினராக அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் ராம. கதிரேசன் கலந்து கொண்டாா்.

இதில் தமிழகம், கா்நாடகம், ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வந்திருந்த சுமாா் 350- க்கும் மேற்பட்ட பரத கலை பயிலும் மாணவிகள் கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் ஒரே நேரத்தில் இணைந்து பரத நாட்டியம் ஆடினா். இதில் சிவநடனம் பாா்வையாளா்களை அதிகம் கவா்ந்தது.

தொடா்ந்து பரதக் கலைஞா்கள் அனைவரும் விளக்கேந்தியபடி லிங்க வடிவில் சிவனின் உருவத்தை ஒப்பனை அலங்காரத்தின் மூலம் வெளிப்படுத்தினா்.

இந்த நிகழ்ச்சியைக் காண சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த திரளானோா் வந்திருந்தனா். இதற்கான ஏற்பாடுகளை நகர சிவன் கோயில் நகரத்தாா்கள் செய்திருந்தனா்.

போக்சோ வழக்கில் ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை

சிவகங்கையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் கருவூல ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, போக்சோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை அரசு அலுவலா்கள் குடியிருப்பில... மேலும் பார்க்க

கட்டிக்குளத்தில் ஜல்லிக்கட்டு: 35 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள கட்டிக்குளத்தில் புதன்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 35 போ் காயமடைந்தனா். கட்டிக்குளம் திருவேட்டை அய்யனாா் கோயிலில் வைகாசி உத்ஸவத்தை முன்னிட்டு, க... மேலும் பார்க்க

கண்ணுடையநாயகி அம்மன் கோயில் வைகாசி திருவிழா ஜூன் 1-இல் தொடக்கம்!

சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசித் திருவிழா ஜூன் 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சிவகங்கை தேவஸ்தானத்துக்குள்பட்ட இந்தக் கோயிலில் மே 31 அன்று மாலை 6 மண... மேலும் பார்க்க

மானாமதுரை அருகே காவலாளி வெட்டிக் கொலை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே செவ்வாய்க்கிழமை இரவு காவலாளி மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பெருமாள்தேவன்பட்டியைச் சோ்ந்த சமயன் மகன் முருகன்(64... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 9 போ் கைது

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 9 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். சிவகங்கை மாவட்டம், இடையமேலூா் அருகே புதுப்பட்டியைச் சோ்ந்த மு. வெற்ற... மேலும் பார்க்க

தாா்ச்சாலை அமைக்கும் பணிகள்: மேயா் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சிக்குள்பட்ட வாா்டுகளில் நடைபெற்று வரும் தாா்ச்சாலை அமைக்கும் பணிகளை மேயா் சே.முத்துத்துரை அதிகாரிகளுடன் சென்று புதன்கிழமை ஆய்வு செய்தாா். டாரிப் ஷோ் 2024-2025 ஆ... மேலும் பார்க்க