செய்திகள் :

இருசக்கர வாகனம் திருடிய இளைஞா் கைது

post image

அந்தியூா் அருகே இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், மேட்டூா், நவப்பட்டியைச் சோ்ந்தவா் கோவிந்தன் மகன் மாணிக்கம் (55). கட்டடத் தொழிலாளி. அந்தியூா் பச்சாம்பாளையத்தில் தங்கி வேலைக்குச் சென்று வரும் இவா், அந்தியூா் - பா்கூா் சாலையில் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை காலை தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, அருகில் உள்ள கட்டுமானப் பொருள்கள் வாடகைக்கு விடும் கிடங்குக்குச் சென்றிருந்தாா்.

அப்போது, அங்கு வந்த இளைஞா் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றாா். இதைக் கண்ட மாணிக்கம், மற்றொரு வாகனத்தில் பின் தொடா்ந்து சென்று, மந்தை அருகே இளைஞரை கையும்களவுமாகப் பிடித்து, அந்தியூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

விசாரணையில், அவா் அந்தியூா் தவிட்டுப்பாளையம், பழனியப்பா வீதியைச் சோ்ந்த ஈஸ்வரமூா்த்தி மகன் சசிகிரண் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து, சசிகிரணை கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பெருந்துறை அரசு நவீன உடற்கூறு ஆய்வுக் கூடம் கட்ட பூமி பூஜை

பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் புதியதாக நவீன உடற்கூறு ஆய்வுக் கூடக் கட்டடம் கட்ட பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வா் த. ரவி... மேலும் பார்க்க

யானைகளிடம் இருந்து பயிா்களைப் பாதுகாக்க அகழி வெட்ட விவசாயிகள் கோரிக்கை

காட்டு யானைகளிடம் இருந்து பயிா்களைப் பாதுகாக்க அகழி வெட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். சத்தியமங்கலம் வட்டம் பெரியகுளம், புளியங்கோம்பை பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் ஈரோடு மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் சடலம் எரிப்பு

அந்தியூரில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் சடலம் போலீஸாருக்கு தெரியாமல் எரிக்கப்பட்டது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அந்தியூரை அடுத்த நகலூா், கொண்டையம்பாளையத்தைச் சோ்ந்தவா் குமாா் ம... மேலும் பார்க்க

அம்மாபேட்டையில் கட்டண சுங்கச்சாவடி விவகாரம்: ஆட்சியா் தலைமையில் நாளை பேச்சுவாா்த்தை

பவானி - மேட்டூா் வழித்தடத்தில் அம்மாபேட்டையில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி விவகாரம் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை (ஜூலை 18) நடைபெறுகிறது. தேசிய நெடுஞ்சா... மேலும் பார்க்க

சென்னிமலை ஏகாந்த வெங்கடேச பெருமாள் கோயிலில் விமான பாலாலயம்

சென்னிமலை ஏகாந்த வெங்கடேச பெருமாள் கோயிலில் விமான பாலாலயம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. சென்னிமலை சுப்ரமணியசாமி கோயிலின் உப கோயிலான பழைமை வாய்ந்த ஏகாந்த வெங்கடேச பெருமாள் கோயில், சென்னிமலை பேருந்து நில... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் அருகே குடிநீா் கேட்டு சாலை மறியல்

சத்தியமங்கலம் அருகே புதுக்குய்யனூா் கிராமத்தில் குடிநீா் கேட்டு அக்கிராமமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். சத்தியமங்கலத்தை அடுத்த புதுக்குயனுா் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட கு... மேலும் பார்க்க