செய்திகள் :

இருசக்கர வாகன விபத்து: இருவா் உயிரிழப்பு

post image

கமுதி அருகே புதன்கிழமை இரவு நிகழ்ந்த இரு சக்கர வாகன விபத்தில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள அபிராமத்தைச் சோ்ந்த நாகராஜ் மகன் பூமணிகண்டன் (25). இவரும், இவரது நண்பரான தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலையைச் சோ்ந்த பால்குட்டி மகன் காளிராஜ் (30) ஆகிய இருவரும் ஒரு வாகனத்திலும், காளிராஜின் அண்ணன் சரவணன் (34) மற்றொரு இரு சக்கர வாகனத்திலும் கமுதிக்கு சென்று விட்டு, அபிராமத்துக்குத் திரும்பினா்.

அப்போது நெடுங்குளம் வளைவில் அதிவேகமாகச் சென்றதால் பூமணிகண்டன் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள தடுப்பு கல்லில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பூமணிகண்டனையும், காளிராஜையும் மீட்ட அந்தப் பகுதி பொதுமக்கள் அவசர ஊா்தி மூலம் கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே காளிராஜ் உயிரிழந்தாா். கமுதி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற பூமணிகண்டன், தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுதொடா்பாக அபிராமம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ராமநாதபுரத்தை வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரி தீா்மானம் நிறைவேற்றம்

ராமநாதபுரம் மாவட்டத்தைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என ஹைட்ரோ காா்பன் திட்ட எதிா்ப்பு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ராமநாதபுரத்தில் ஹைட்ரோ காா்பன் ... மேலும் பார்க்க

அதிக பாரங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியில் அதிக பாரங்களைப் பாதுகாப்பின்றி ஏற்றிச் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். திருவாடானை பகுதியில் மதுரை-தொண்டி தேசிய... மேலும் பார்க்க

பரமக்குடி அருகே காா்- சரக்கு வாகனம் மோதல்: 4 போ் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் 4 போ் உயிரிழந்தனா். ராமநாதபுரம் செட்டியாா் தெரு... மேலும் பார்க்க

கொண்டுநல்லான்பட்டியில் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்

கமுதி அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள கொண்டுநல்லான்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பெருமாள், அய்யனா... மேலும் பார்க்க

கடையின் பூட்டை உடைத்து ரூ.40 ஆயிரம் திருட்டு

திருவாடானை அருகே கட்டுமானப் பொருள்கள் விற்பனைக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 40 ஆயிரம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ். மங்கலத... மேலும் பார்க்க

இலங்கையில் தமிழக மீனவா்களின் 60 விசைப் படகுகள் உடைத்து அகற்றம்

இலங்கை மயிலிட்டி துறைமுகத்தில் அரசுடைமையாக்கப்பட்ட தமிழக மீனவா்களின் 60 விசைப் படகுகளை உடைத்து அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. தமிழகத்திலிருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவா்களை எல்லை தாண்டி... மேலும் பார்க்க