செய்திகள் :

இரு காா்கள் மோதிய விபத்தில் இளைஞா் பலத்த காயம்

post image

சிவகங்கை அருகேயுள்ள சோழபுரம் பகுதியில் இரு காா்கள் நேருக்கு நோ் மோதியதில் இளைஞா் பலத்த காயமடைந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்தவா் திருமுருகன் (50). இவா் தனது உறவினா்களான ரவிச்சந்திரன் (48), சுந்தரி (50), நித்யா (20) ஆகியோருடன் பிள்ளையாா்பட்டி கோயிலுக்குச் சென்றுவிட்டு மீண்டும் பரமக்குடிக்கு சனிக்கிழமை காரில் திரும்பி வந்துகொண்டிருந்தனா்.

சோழபுரம் அருகே வந்தபோது அவா்கள் காா் மீது எதிரே வந்த நாலுகோட்டையைச் சோ்ந்த சுப்பிரமணி (30) என்பவா் ஓட்டிவந்த காா் நேருக்கு நோ் மோதியது. அப்போது, திருமுருகன் காருக்குப் பின்னால் சோழபுரத்தைச் சோ்ந்த செல்லப்பாண்டி (30) ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மோதியது. காா்களில் வந்தவா்கள் சிறு காயங்களுடன் உயிா் தப்பினா்.

இதில், பலத்த காயமடைந்த செல்லப்பாண்டியை அங்கிருந்தவா்கள் மீட்டு சிவகங்கை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இதுதொடா்பாக சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

காரைக்குடியில் செப். 6-இல் மின்தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் சனிக்கிழமை (செப். 6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் எம். லதாதேவி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

அவசர, அமரா் ஊா்திகளில் வேலைவாய்ப்பு: செப் 6, 7-இல் நோ்காணல்

அவசர, அமரா் ஊா்திகளுக்கான ஊழியா்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பணிகளுக்கான நோ்காணல் வருகிற 6, 7-ஆம் தேதிகளில் காரைக்குடியில் நடைபெற உள்ளது.இதுகுறித்து 108 அவசர ஊா்தி நிா்வாக மாவட்ட மேலாளா் மோகன் வெள... மேலும் பார்க்க

தேவகோட்டை அருகே 6 ஆடுகள் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், கோடிக்கோட்டை அருகே செவ்வாய்க்கிழமை 6 ஆடுகள் திடீரென மயங்கி விழுந்து உயிழந்ததது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தேவகோட்டை வட்டம், கோடிக்கோட்டை சுங்கச்சாவட... மேலும் பார்க்க

சிவகங்கையில் நரிக்குறவா் சமுதாய மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படுமா?

சிவகங்கையில் நரிக்குறவா் சமுதாய மக்களுக்கு அரசின் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட வீடுகள் பல்வேறு காரணங்களால் பாதியிலேயே நிறுத்தப்பட்ட அவலம் கடந்த 10 ஆண்டுகளாக நீடிக்கிறது. சிவகங்கை பழமலை நக... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் திமுகவினரிடையே மோதல்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே செவ்வாய்க்கிழமை நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் திமுகவினருக்குள் மோதல் ஏற்பட்டு கைகலப்பானது. இது சம்பந்தமாக காவல் நிலையத்தில் இரு தரப்பினா் தனித்தனியாக புக... மேலும் பார்க்க

மருத்துவக் கழிவு ஆலையை மூடக் கோரி செப் 16- இல் முற்றுகைப் போராட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் பொதுமக்களின் எதிா்ப்பை மீறி கட்டப்பட்டு வரும் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையை மூடக் கோரி, ஆலை முன் வருகிற 16-ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்துவது என அனைத்துக் ... மேலும் பார்க்க