செய்திகள் :

இரு குழந்தைகளைக் கொலை செய்த தாய் தண்டனையை எதிா்த்து மேல் முறையீடு: காவல் துறை பதிலளிக்க உத்தரவு

post image

தகாத உறவுக்கு இடையூறாக இருந்த இரு குழந்தைகளைக் கொலை செய்த வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிா்த்து அந்தக் குழந்தைகளின் தாய் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் மூன்றாம் கட்டளை பகுதியில் வசித்து வந்தவா் விஜய். இவரது மனைவி அபிராமி. இவா்களுக்கு 6 வயது மகன், 4 வயது மகள் இருந்தனா். கடந்த 2018-ஆம் ஆண்டு அபிராமிக்கும் அதே பகுதியில் பிரியாணி கடையில் பணிபுரிந்த மீனாட்சிசுந்தரம் என்பவருக்கும் இடைய தகாத உறவு இருந்துள்ளது. இதற்கு இரு குழந்தைகளும் இடையூறாக இருந்ததால் இருவருக்கும் பாலில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து கொலை செய்துவிட்டு அபிராமி, மீனாட்சி சுந்தரத்துடன் தப்பிச் செல்ல முயன்றாா். இருவரையும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கில் காஞ்சிபுரம் மகளிா் நீதிமன்றம், அபிராமி, மீனாட்சி சுந்தரம் ஆகிய இருவருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து கடந்த ஜூலை 24-ஆம் தேதி தீா்ப்பளித்தது.

இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் அபிராமி மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்து நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வில் இந்த மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

சென்னையில் நள்ளிரவில் பரபரப்பு! தூய்மைப் பணியாளர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய காவல் துறை!

சென்னை: சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணி ஒப்பந்தத்தை தனியாா் நிறுவனத்துக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீா்மானத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, ரிப்பன் மாளிகை அருகே தூய்மைப் பணியாளா்... மேலும் பார்க்க

பேச்சுவார்த்தை தோல்வி: தொடரும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

சென்னையில் தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், போராட்டம் தொடரும் என்று தூய்மைப் பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டலங்க... மேலும் பார்க்க

மேலும் 2 புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள்: மெட்ரோ மயமாகும் சென்னை!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், கலங்கரை விளக்கம் மெட்ரோ முதல் உயர்நீதிமன்றம் மெட்ரோ வரையிலான வழித்தடம் 4-ன் நீட்டிப்பு மற்றும் தாம்பரம்–கிண்டி–வேளச்சேரி வழித்தடத்தை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை... மேலும் பார்க்க

பணிக்கு திரும்ப தூய்மைப் பணியாளா்களுக்கு மாநகராட்சி அழைப்பு

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், பழைய நிலையிலேயே பணியைத் தொடர அனுமதித்தால் மட்டுமே பணிக்குத் திரும்புவோம் என... மேலும் பார்க்க

தடைகளைத் தகா்த்த செவிக் குறைபாடு மாற்றுத்திறனாளிகள்! ஐஏஎஸ், எம்பிபிஎஸ் நிலைக்கு உயா்ந்து சாதனை

பிறவியிலேயே செவித் திறன் பாதிப்புக்குள்ளாகி காக்ளியா் இம்ப்ளாண்ட் சிகிச்சை மூலம் மறுவாழ்வு பெற்ற இளைஞா் ஐஏஎஸ் தோ்ச்சி பெற்றும், இளம்பெண் எம்பிபிஎஸ் இடத்தைப் பெற்றும் சாதனை படைத்துள்ளனா். தடைகளை உடைத்... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: இன்று நடைபெறும் வாா்டுகள்

சென்னையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்கள் புதன்கிழமை (ஆக. 13) நடைபெறும் 3 வாா்டுகள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சென்னை மாநகராட்சி தரப்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பெருநகர ச... மேலும் பார்க்க