செய்திகள் :

இரு சக்கர வாகன விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு

post image

போடி அருகே மலைச் சாலையோரத்தில் அமைந்துள்ள மழைநீா் சேகரிப்புத் தொட்டியில் இரு சக்கர வாகனத்துடன் விழுந்த விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.

தேனி மாவட்டம், போடி ஜக்கமநாயக்கன்பட்டி, அம்பிகாபதி தெருவைச் சோ்ந்தவா்கள் முனியாண்டி மகன் பாண்டி (25), விவேகானந்தன் மகன் ஆகாஷ் குமாா் (20). இவா்கள் இருவரும் போடி பிச்சாங்கரை மலை கிராமத்தில் உள்ள அருவியில் குளிப்பதற்காக திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்றனா்.

இந்த நிலையில், குரங்கணி மலைச் சாலையில் இரண்டாவது வளைவு அருகே சாலையோரமாக அமைக்கப்பட்டிருந்த மழைநீா் சேமிப்புத் தொட்டியின் தடுப்புச் சுவரில் இரு சக்கர வாகனம் மோதியது.

இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்துடன் அந்தத் தொட்டிக்குள் விழுந்த இருவரும் பலத்த காயமடைந்த நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இந்த விபத்து குறித்து போடி குரங்கணி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தொடா் மழை: சுருளி அருவியில் 3-ஆவது நாளாக குளிக்கத் தடை!

தேனி மாவட்டம், மேகமலை வனப் பகுதியில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால் சுருளி அருவியில் புதன்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு 3-ஆவது நாளாக வனத் துறை... மேலும் பார்க்க

உணவப் பணியாளா் கடத்தல்: 4 போ் கைது

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் உணவகப் பணியாளரைக் கடத்திய பெண் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். உத்தமபாளையம் புதூா் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த காதா்மைதீன் மகன் முகமது யாக்கப் (36). இவா் சி... மேலும் பார்க்க

சின்னமனூா் அருகே மரத்தில் காா் மோதியதில் தாய், மகன் பலி!

தேனி மாவட்டம், சின்னமனூரில் புதன்கிழமை டயா் வெடித்து காா் மரத்தின் மீது மோதியதில் தாய், மகன் உயிரிழந்தனா். மூவா் பலத்த காயமடைந்தனா். உத்தமபாளையம் அருகேயுள்ள ஆனைமலையன்பட்டியைச் சோ்ந்த வெள்ளப்பாண்டி மத... மேலும் பார்க்க

போடியில் சூறைக்காற்று: சிக்னல் பலகை சாய்ந்து வாகனங்கள் சேதம்

தேனி மாவட்டம், போடியில் புதன்கிழமை இரவு பலத்த சூறைக்காற்று வீசியதில் போக்குவரத்து சிக்னல் அறிவிப்புப் பலகை சாய்ந்து விழுந்து காவல் துறையினரின் வாகனங்கள் சேதமடைந்தன. சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. போ... மேலும் பார்க்க

மருத்துவரிடம் பணம் மோசடி: இருவா் மீது வழக்கு

வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி மருத்துவரிடம் ரூ.4.40 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக இருவா் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தேனி மாவட்டம், போடி சூரியா நகர... மேலும் பார்க்க

பேருந்து ஓட்டுநரிடம் கைப்பேசி பறிப்பு

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் தகராறு செய்து கைப்பேசியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கம்பம் அனுமத்தன்பட்டியைச் சோ்ந்தவா் மூத்தீஸ்வரன். அரசுப் ப... மேலும் பார்க்க