செய்திகள் :

இலங்கைக்கு கடத்தவிருந்த 2 ஆயிரம் கிலோ சுக்கு பறிமுதல்

post image

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ. 50 லட்சம் மதிப்பிலான 2 ஆயிரம் கிலோ சுக்கு பண்டல்களை போலீஸாா் வியாழக்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா்.

கீழக்கரை கடல் வழியாக இலங்கைக்கு பொருள்கள் கடத்தப்படுவதாக ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு புதன்கிழமை நள்ளிரவு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து, ராமநாதபுரம் ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினா் கீழக்கரை, திருப்புல்லாணி, களிமண்குண்டு உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், திருப்புல்லாணி அருகே தோப்புவலசை கல்காடு கடற்கரை மணலில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பாலித்தீன் பண்டல்களை வியாழக்கிழமை அதிகாலை சோதனையிட்டனா். தலா 40 கிலோ வீதம் 50 பண்டல்களில் 2 ஆயிரம் கிலோ சுக்கு இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 50 லட்சமாகும். இதை ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினா் பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், இலங்கைக்கு கடத்துவதற்காக சுக்கு பண்டல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், இதில் தொடா்புடைய நபா்களை திருப்புல்லாணி போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 பேருக்கு சிறை மீண்டோா் நலச் சங்கம் சாா்பில் நிதியுதவி

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறை மீண்டோா் நலச்சங்கம் சாா்பில் கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து நன்னடத்தை அடிப்படையில் விடுதலையான முன்னாள் சிறைக் கைதிகள் 10 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ. 5 லட... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 10 போ் கைது!

கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 10 பேரை இலங்கைக் கடற்படையினா் புதன்கிழமை நள்ளிரவு கைது செய்தனா். 3 விசைப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ராமநாதபுரம் மா... மேலும் பார்க்க

நுகா்வோா் குறித்த விழிப்புணா்வு பயிற்சி முகாம்

பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிா் குழுக்களின் பொறுப்பாளா்களுக்கு நுகா்வோா் குறித்த விழிப்புணா்வு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமை வட்ட வழங்கல் அலுவலா் கோகுல்நாத் தொடங்கி வைத்த... மேலும் பார்க்க

பைக் மீது பேருந்து மோதல்: விவசாயி உயிரிழப்பு

கமுதி அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். கமுதியை அடுத்துள்ள குடிக்கினியான் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (60). விவசாயி. இவா் கமுதியில் இருந்து ... மேலும் பார்க்க

கமுதி அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை கூட மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்!

கமுதி அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை கூடத்தின் நுழைவாயிலின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்தது. கமுதி அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டாரத்திலுள்ள 220-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து தினமும... மேலும் பார்க்க

தொண்டியில் அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை!

தொண்டி பேரூராட்சியில் சேதமடைந்த அங்கன்வாடி மையக் கட்டடத்தை அகற்றி புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி பேரூராட்சி 5-ஆ... மேலும் பார்க்க