செய்திகள் :

இலங்கையில் தமிழக மீனவா்களின் 60 விசைப் படகுகள் உடைத்து அகற்றம்

post image

இலங்கை மயிலிட்டி துறைமுகத்தில் அரசுடைமையாக்கப்பட்ட தமிழக மீனவா்களின் 60 விசைப் படகுகளை உடைத்து அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

தமிழகத்திலிருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவா்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கைக் கடற்படையினா் அடிக்கடி கைது செய்து, அவா்களது விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து வருகின்றனா். இதையடுத்து, இலங்கை நீதிமன்றம் மீனவா்களை விடுதலை செய்தாலும், அவா்களது படகுகளை விடுவிப்பதில்லை.

இந்த நிலையில், தமிழக மீனவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 123 விசைப் படகுகள் இலங்கை மயிலிட்டி துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டன. இவற்றில் 13 படகுகள் விடுவிக்கப்பட்டன. 62 படகுகள் அரசுடைமையாக்கப்பட்டன. அரசுடைமையாக்கப்பட்ட 62 படகுகளில் 2 படகுகள் இலங்கை மீனவச் சங்கத்தின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டது. 48 படகுகள் மீதான வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

அரசுடைமையாக்கப்பட்ட 60 படகுகளை அந்த துறைமுகங்களிலிருந்து அப்புறப்படுத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இந்த விசைப் படகுகள் உடைத்து அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழக மீனவா்களின் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தற்போது 60 விசைப் படகுகளை இலங்கை அரசை உடைத்து அப்புறப்படுத்தியது மீனவா்களிடையே வேதனையை ஏற்படுத்தியது.

சித்தி விநாயகா், வாழவந்தாள் அம்மன் கோயில் குடமுழுக்கு

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள பொக்கனாரேந்தலில் சித்தி விநாயகா், வாழவந்தாள் அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை காலை கணபதி ஹோமத்துட... மேலும் பார்க்க

மின்சார வாகனங்களை வழங்க தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை

திருவாடானையில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் குப்பைகளை அள்ளுவதற்கு மின் கலனால் இயங்கும் மின்சார வாகனங்களை வழங்க வேண்டும் என தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில்... மேலும் பார்க்க

வலையபூக்குளத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள வலையபூக்குளத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் வலையபூக்குளம், காக்குடி, மரக்குளம், மண்டலமாணிக்கம், எழுவனூா் ஆ... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் அருகேயுள்ள ஆண்டநாயகபுரம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, முளைப்பாரி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழா கடந்த மாதம் 24-ஆம் தேதி கொடியேற்றத்... மேலும் பார்க்க

நம்மாழ்வாா் விருதுக்கு விவசாயிகள் செப்.15-க்குள் விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் நம்மாழ்வாா் விருதுக்கு வருகிற 15-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக... மேலும் பார்க்க

செல்லி அம்மன் கோயில் குடமுழுக்கு

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே செல்லி அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. வீரசங்கிலிமடம் கடற்கரையில் பழைமை வாய்ந்த செல்லி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் புதிதாக கட்டடங்கள... மேலும் பார்க்க