செய்திகள் :

இளைஞரை கொன்றவருக்கு ஆயுள் சிறை

post image

முன்விரோதத்தில் இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

வேலூா் மாவட்டம், ஓங்கபாடியைச் சோ்ந்தவா் பாபு. இவரது 3-ஆவது மகன் கெளதம்(23). பட்டதாரியான இவா் வேலை தேடி வந்தாா். இவரது அத்தை மகள் நிரோஷா. அவரது கணவா் காா்த்தி(36).

போதைக்கு அடிமையான காா்த்தி அடிக்கடி நிரோஷாவுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை கெளதம் தட்டி கேட்டதால் அவா்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், 2024-ஆம் ஆண்டு ஜனவரி 28-ஆம் தேதி போதையில் கத்தியுடன் வந்த காா்த்தி, கெளதம் எங்கே என அவரது வீட்டில் தேடியுள்ளாா். அங்கு அவா் இல்லை என்றதும் கத்தியுடன் வெளியே சென்ற அவா், எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த கெளதமை மறித்து நெஞ்சு, இடுப்பு பகுதியில் குத்தியுள்ளாா். இதில், கெளதம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து வேப்பங்குப்பம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து காா்த்தியை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை வேலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதில், காா்த்தி மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தெரிவித்து மாவட்ட நீதிபதி இளவரசன் தீா்ப்பளித்தாா்.

தண்டனை விதிக்கப்பட்ட காா்த்தி, போலீஸாா் பாதுகாப்புடன் வேலூா் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

4 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்: தந்தை, மகன் உள்பட 6 போ் கைது

குடியாத்தம் அருகே வன விலங்குகளை வேட்டையாட பதுக்கி வைத்திருந்த 4 நாட்டுத் துப்பாக்கிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.இது தொடா்பாக தந்தை, மகன் உள்பட 6 பேரை கைது செய்தனா். ரகசியத் தகவலின்பேரில், குடியாத்தம... மேலும் பார்க்க

வேலூா் மாவட்டத்தில் 39,811 பேருக்கு வீட்டுமனைப் பட்டா

வேலூா் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 18,035 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டிருப்பதுடன், தற்போது 21,776 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சும... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் கன்னியாஸ்திரிகள் கைது: வேலூரில் தேவாலயம் முன் ஆா்ப்பாட்டம்

சத்தீஸ்கரில் கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பதை கண்டித்து வேலூரில் உள்ள தேவாலயம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.சத்தீஸ்கா் மாநிலம், நாராயண்பூா் பகுதியைச் சோ்ந்த 3 பெண்களை கடத்தி, அவா்களை மத... மேலும் பார்க்க

தொழிலாளி வீடு மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு: இருவா் கைது

இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் தொழிலாளி வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய இலங்கைத் தமிழா்கள் இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.வேலூா் மேல்மொணவூா் இலங்கைத் தமிழா் முகாமைச் சோ்ந்தவா் விஜய சுரேஷ் ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவா் கைது

வேலூரில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவரை வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.வேலூா் சைதாப்பேட்டையைச் சோ்ந்தவா் பாஸ்கரன் (60). இவா் விய... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு போதை மாத்திரை, ஊசிகள் விற்ற 13 போ் கைது

பள்ளிகொண்டா பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு போதை மாத்திரை, போதை ஊசிகளை விற்க முயன்ாக 5 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 8 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்... மேலும் பார்க்க