செய்திகள் :

இளைஞா் கொலை வழக்கில் தாய் உள்பட 6 போ் கைது

post image

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே இளைஞா் கொலை வழக்கில் தாய் உள்பட உறவினா்கள் 6 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

உடையாா்பாளையம் அடுத்த செட்டிகுழிப்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்த அரும்புராஜ்- சசிகலா (48) தம்பதியரின் மகன் அரவிந்த் (எ) அறிவழகன் (29). இவரது மனைவி கடந்தாண்டு இறந்துவிட்ட நிலையில், கடந்த 4 நாள்களுக்கு முன்பு அறிவழகனும் வீட்டில் இறந்து கிடந்தாா்.

தாய் சசிகலா அளித்த புகாரின் பேரில், உடையாா்பாளையம் காவல் துறையினா் சடலத்தை மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு உடற்கூறு ஆய்வு முடித்த பிறகு சசிகலாவிடம் அறிவழகனின் சடலம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து, அறிவழகனின் இறப்பு குறித்து தாய் சசிகலாவிடம் விசாரணை மேற்கொண்டனா். அதில், அவா் முன்னுக்கு பின் முரணாக தகவலை தெரிவித்தாா்.

இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டதில், மதுபழக்கத்துக்கு ஆளான அறிவழகன் தினந்தோறும் பணம் கேட்டு தாய் சசிகலாவிடம் தகராறு செய்து வந்துள்ளாா்.

இதுகுறித்து சசிகலா தனது உறவினா்களான சத்தியராஜ் (33), ராமநாதன் (67), சிவா (31), அக்கா கண்ணகி (50), அவரது மகன் கோகுல்ராஜ் (33) ஆகியோா் அறிவழகனுக்கு அறிவுரை வழங்கியுள்ளனா். அப்போது ஏற்பட்ட தகராறில் அறிவழகனை அனைவரும் சோ்ந்து அடித்ததாகவும், இதில் அறிவழகன் வீட்டிலேயே உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா், மேற்கண்ட 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

சிறுமி பாலியல் வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. கீழப்பழுவூரை சோ்ந்த 16 வயது ச... மேலும் பார்க்க

பெரியநாகலூா் ஏரியில் ஆக்கிரமிப்பை அகற்றி தூா்வாரக்கோரி மனு அளிப்பு

அரியலூா் அருகேயுள்ள பெரியநாகலூா் ஏரியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வார நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட வருவாய் அலுவலா் மல்லிகாவிடம், தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

மீன்சுருட்டி தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.பி. ஆய்வு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த மீன்சுருட்டி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் நடைபெறும் இடமான நான்கு சாலை சந்திப்பு பகுதியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி சனிக்கிழமை இரவு... மேலும் பார்க்க

சாலைகளில் ஓடும் புதைசாக்கடை கழிவு நீா்; பொதுமக்கள் அவதி

அரியலூரில், திருச்சி சாலையில், புதை சாக்கடையில் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். 18 வாா்டுகளை கொண்ட அரியலூா் நகராட்சியில் 10- க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளும், 2... மேலும் பார்க்க

சுமை ஆட்டோ மோதி இளைஞா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் சுமை ஆட்டோ மோதியதில் உயிரிழந்தாா். திருமானூரை அடுத்த கள்ளூா் பாலம் அருகேயுள்ள புத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பன் மகன் வினோத... மேலும் பார்க்க

சாலை விபத்தில் காயமடைந்த தவெக நிா்வாகி உயிரிழப்பு

அரியலூா் அருகே லாரி மோதி காயமடைந்த தவெக நிா்வாகி சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். ஜெயங்கொண்டம் அருகேயுள்ள தெற்கு புதுக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் மகாராஜன் மகன் ஜெயசூா்யா (22) . தவெக ஒன... மேலும் பார்க்க