செய்திகள் :

இளைஞா் தாக்கப்பட்ட விவகாரம்: முதல்நிலைக் காவலா் ஆயுதப் படைக்கு மாற்றம்

post image

கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் இளைஞா் தாக்கப்பட்டது குறித்த விடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, அந்தக் காவல் நிலைய முதல்நிலைக் காவலரை ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. ரஜத் சதுா்வேதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராக மணிகண்டன் பணியாற்றினாா். இவா், ஜூலை 6-ஆம் தேதி அந்த காவல் நிலையத்துக்கு வந்த கணங்கூா் கிராமத்தைச் சோ்ந்த மலையன் மகன் விக்கி (எ) செந்தில்குமாரை தாக்கியது தொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் வெள்ளிக்கிழமை பரவியது.

இதையடுத்து, மாவட்ட எஸ்.பி. ரஜத் சதுா்வேதி முதல்நிலைக் காவலா் மணிகண்டனை மாவட்ட ஆயுதப் படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டாா். மேலும், இந்த சம்பவத்தில் தொடா்புடைய மற்ற காவலா்களின் செயல்பாடுகள் குறித்து விசாரிக்க கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி.க்கு உத்தரவிட்டாா்.

கல்வராயன்மலையில் வேளாண் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டாரத்தில் தோட்டக் கலைத் துறையின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு வேளாண் திட்டப் பணிகளை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கல்வராயன... மேலும் பார்க்க

கீரனூரில் வேளாண்மை விரிவாக்க மையம் திறப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், கீரனூரில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில், ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட திருக்கோவிலூா் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தை தம... மேலும் பார்க்க

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே வியாழக்கிழமை இரவு சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். கருந்தலாகுறிச்சி கிராமத்தைச் சோ்ந்த முத்து மகன் பெரியசாமி (49), தொழிலாளி. இவா், கடந்த 2-ஆம் தேதி கூகை... மேலும் பார்க்க

ஊராட்சிச் செயலா் உயிரிழப்பில் சந்தேகம்: மனைவி புகாா்

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டை வட்டம், சாங்கியம் ஊராட்சிச் செயலா் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது மனைவி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாரளித்தாா். சாங்கியம் கிராமத்தைச் சோ்ந்த சொட்டைய... மேலும் பார்க்க

சங்கராபுரம் அருகே முதிய தம்பதியை மிரட்டி 211 பவுன் நகைகள் கொள்ளை

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே வியாழக்கிழமை அதிகாலை முதிய தம்பதியை மிரட்டி, வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 211 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற முகமூடி அணிந்த 4 போ் கும்பலை ப... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே கோயில் திருவிழாவில் மின் விளக்குகள் அமைக்கும் பணியில் ஈடுபட்ட இளைஞா் மின்சாரம் பாய்ந்து புதன்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த பொற்படாக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த புஷ... மேலும் பார்க்க