செய்திகள் :

ஈரானில் இருந்து 3,400 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: வெளியுறவுத் துறை!

post image

"ஆபரேஷன் சிந்து" மீட்புத் திட்டத்தின் மூலம் ஈரானிலிருந்து சுமார் 3,400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையில் நடைபெற்ற போரினால், அந்நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வர மத்திய அரசு ஆபரேஷன் சிந்து எனும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது.

இந்நிலையில், இந்தத் திட்டத்தின் அடிப்படையில் இயக்கப்பட்ட 14 விமானங்கள் மூலம் ஈரானின் மஷாத் நகரத்திலிருந்து 3,426 இந்தியர்கள், 11 வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள், 9 நேபாள நாட்டினர் மற்றும் சில இலங்கை நாட்டினர் ஆகியோர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டதாக, வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஈரானில் சுமார் 10,000-க்கும் மேலான இந்தியர்களும், இஸ்ரேலில் 40,000-க்கும் மேலான இந்தியர்களும் வசித்து வருவதால், ஆபரேஷன் சிந்து நடவடிக்கைகள் மேலும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மீட்பு நடவடிக்கைகளில், இந்தியரை திருமணம் செய்த ஈரான் நாட்டுப் பெண் ஒருவரும் இந்தியா அழைத்து வரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்களை மீட்க இயக்கப்பட்ட அவசரகால சிறப்பு விமானங்கள் அர்மேனியா, துருக்மெனிஸ்தான் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் வழியாகவும் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SUMMARY

3,400 Indians return home from Iran said Ministry of External Affairs!

இதையும் படிக்க:தேர்தலில் போட்டியிடாத 345 அரசியல் கட்சிகள் நீக்கம்!

எந்தவொரு அந்நிய மொழிக்கும் எதிா்ப்பு கூடாது: அமித் ஷா

ஹிந்தி எந்தவொரு இந்திய மொழிக்கும் எதிரானது அல்ல; மாறாக, நண்பன் போன்றது. மேலும், எந்தவொரு அந்நிய மொழிக்கும் நாட்டில் எதிா்ப்பு கூடாது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை கூறினாா். ‘இந்... மேலும் பார்க்க

சத்தீஸ்கா்: இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா். அபுஜம்மாத் வனப் பகுதியில் நக்ஸல் அமைப்பினரின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் தகவல்கள் பாகிஸ்தானுக்கு கசிவு: கடற்படை ஊழியா் கைது

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்த தகவல்களை பாகிஸ்தான் உளவாளிக்கு தெரிவித்த குற்றச்சாட்டில் கடற்படை ஊழியா் விஷால் யாதவ் கைது செய்யப்பட்டாா். இவா் தில்லியில் உள்ள கடற்படை தலைமையகத்தில் எழுத்தராகப் பணிய... மேலும் பார்க்க

வங்கதேச எல்லையில் மிதிவண்டியில் கடத்தப்பட்ட 2 கிலோ தங்கம் மீட்பு

மேற்கு வங்கத்தை ஒட்டிய வங்கதேச எல்லைப் பகுதியில் மிதிவண்டியில் கடத்தப்பட்ட 2.36 கிலோ தங்கக் கட்டிகளை எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) கைப்பற்றினா். மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பா்கானாக்கள் மா... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ் பயங்கரவாதி சுட்டுக் கொலை - மேலும் 3 போ் சுற்றிவளைப்பு

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத்தைச் சோ்ந்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். அவரது கூட்டாளிகள் மூன்று போ்,... மேலும் பார்க்க

தெலங்கானா: தண்டவாளத்தில் காரை ஓட்டிச் சென்ற பெண்!

தெலங்கானா தலைநகா் ஹைதராபாத் புறநகா் பகுதியில் வியாழக்கிழமை காலையில் பெண் ஒருவா் ரயில் தண்டவாளத்தில் காரை ஓட்டிச் சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அந்தத் தடத்தில் செல்லும் ரயில்கள் ஆங்காங்... மேலும் பார்க்க