செய்திகள் :

ஈரானுடன் போர்: இஸ்ரேலில் இருந்து முதல்கட்டமாக 160 இந்தியர்கள் தாயகம் வருகை!

post image

ஈரான் - இஸ்ரேல் இடையே சண்டை தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேலில் இருந்து முதல்கட்டமாக 160 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர். அவர்கள் அனைவரும் ஜோர்டான் வழியாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.

போர் எதிரொலியாக இஸ்ரேல் தமது வான்வெளியை மூடிவிட்டதனால், இஸ்ரேலில் இருந்த இந்தியர்கள் ஜோர்டானுக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டு அதன்பின் ஜோர்டான் தலைநகர் அம்மான் நகரிலிருந்து சிறப்பு விமானங்களில் அவர்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்கீழ், முதல்கட்டமாக 160 இந்தியர்கள் அம்மானிலிருந்து தில்லிக்கு தனி விமானத்தில் புறப்பட்டுள்ளனர். அவர்கள் தில்லியை இன்றிரவு வந்தடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் இன்னும் சுமார் 40,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான், இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்க ’ஆபரேஷன் சிந்து’ நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரான் போரால் பாஸ்மதி அரிசிக்கு வந்த சோதனை!

இஸ்ரேல் - ஈரான் இடையிலான போரின் காரணமாக ஈரானுக்கு ஏற்றுமதியாக வேண்டிய ஒரு லட்சம் டன் பாஸ்மதி அரிசி துறைமுகங்களில் தேக்கமடைந்துள்ளன.இந்தியாவில் உற்பத்தியாகும் பாஸ்மதி அரிசியில் 18% - 20% ஈரானுக்கு ஏற்ற... மேலும் பார்க்க

மே.வங்கம்: இடைத்தேர்தலில் பாஜக தோல்வி! ஆளும் திரிணமூல் காங். பெருவெற்றி!

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கலிகஞ்ச் சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஆலிஃபா அஹமது வெற்றி பெற்றுள்ளார். முன்னதாக, இதே தொகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு பொதுத... மேலும் பார்க்க

விண்வெளி நாயகியாகும் ஆந்திர இளம்பெண்: சர்வதேச விண்வெளி வீராங்கனையாகத் தேர்வு!

ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதான பொறியியல் பட்டதாரி ’ஜானவி தங்கேட்டி’ அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘டைட்டான் ஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ்(டிஎஸ்ஐ) மேற்கொண்டுவரும் விண்வெளி திட்டத்த... மேலும் பார்க்க

எதிர்க்கட்சியைக் குறைத்து மதிப்பிட்டால் மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்: கார்கே!

பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சிகளைக் குறைத்து மதிப்பிட்டால் மக்கள் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள் என்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். கார்கே ராய்ச்சூரில் கார்கே பல்வேறு திட... மேலும் பார்க்க

தில்லியில் ஓரிரு நாள்களில் பருவமழை தொடங்க வாய்ப்பு!

தில்லியில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட ஓரிரு நாள்களில் முன்னதாகவே தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளம், தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை ஏற்கெனவே தொடங்கியுள்ள... மேலும் பார்க்க

ரயிலில் இருக்கை தர மறுத்த பயணியை சரமாரியாக தாக்கிய பாஜக எம்எல்ஏ ஆதரவாளர்கள்!

தில்லி - போபால் வந்தே பாரத் ரயிலில் ஒரு பயணியை அதே ரயிலில் பயணித்த பாஜக எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் சரமாரியாகத் தாக்கும் விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தில்லி - போபால் இடையேயான வந்தே பாரத் ரய... மேலும் பார்க்க