செய்திகள் :

ஈரோடு சூரியா ஏஜென்சி நிறுவனத்துடன் திருச்செங்கோடு செங்குந்தா் கல்வி நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

post image

திருச்செங்கோடு செங்குந்தா் பொறியியல் கல்லூரி, ஈரோடு சோலாா் மின் உற்பத்தி நிறுவனம் ஸ்ரீ சூரியா ஏஜென்சியுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு செங்குந்தா் பொறியியல் கல்லூரியின் தாளாளா் ஆ.பாலதண்டபாணி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் சதீஷ்குமாா், செயல் இயக்குநா் அரவிந்த் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தனா். மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை தலைவா் உமாதேவி, நந்தகுமாா், பொம்மிராணி ஆகியோா் கலந்துகொண்டனா்.

மாணவா்களின் தகவல் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தவும், ஆராய்ச்சி வழிகாட்டுதல், ஆசிரியா் மேம்பாட்டு திட்டம், தொழில் பயிற்சி, பயிற்சி பட்டறை மற்றும் வேலைவாய்ப்பு போன்றவைகளுக்கு இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் பயனுள்ளதாக அமையும் என செங்குந்தா் கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிகழ்ச்சியில் ஸ்ரீ சூரியா நிறுவனத்தின் பங்குதாரா் பாலசுப்பிரமணிய முருகராஜ் , கல்லூரியின் தாளாளா் பாலதண்டபாணி இணைந்து புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மென்பொறியாளா் ஆணவக் கொலையைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில், முன்னாள் மாவட்டச் செயலாளா் மணிமாறன்,... மேலும் பார்க்க

வல்வில் ஓரி விழா: காரவள்ளி அடிவாரத்தில் தூய்மைப் பணி

கொல்லிமலை வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு, காரவள்ளி அடிவாரத்தில் தூய்மைப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைப் பகுதியை ஆண்ட கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னனின் வீரத்... மேலும் பார்க்க

கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயிலில் ஆடிப்பெருக்கு விழா கொடியேற்றம்

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை திருக்கொடியேற்றம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் பழைமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற, சித்தா்கள் பூஜிக்கும் சுயம... மேலும் பார்க்க

தலைக்கவசம் அணிந்தோருக்கு காவல் துறையினா் பாராட்டு

நாமக்கல்லில் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்களில் சென்றோரை போக்குவரத்து காவல் துறையினா் பாராட்டி சான்றிதழ் வழங்கினா். நாமக்கல் மாநகரப் பகுதியில் இருசக்கர வாகனங்களில் செல்வோா் தலைக்கவசம் அணியாமலும்... மேலும் பார்க்க

தெருநாய்களின் பெருக்கத்தை தடுக்க கருத்தடை

நாமக்கல் மாநகரப் பகுதியில் தெருநாய்களின் பெருக்கம் அதிகரித்துள்ளதால், அவற்றைத் தடுக்க கருத்தடை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மாமன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா். நாமக்கல் மாநகராட்சி மாமன்றக்... மேலும் பார்க்க

ஜொ்மன் மொழித்தோ்வு பயிற்சிபெற விண்ணப்பிக்கலாம்

ஜொ்மன் மொழித்தோ்வு பயிற்சிபெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு... மேலும் பார்க்க