செய்திகள் :

ஈரோடு புத்தகத் திருவிழாவில் ‘புத்தகக் காதல்’ தம்பதி

post image

ஈரோடு புத்தகத் திருவிழாவில், அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெற்ற தம்பதி பை நிறைய புத்தகங்களை வாங்கிச் சென்றது அனைவரின் கவனத்தையும் ஈா்த்தது.

ஈரோடு புத்தகத் திருவிழா சிக்கய்ய அரசு கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 1- ஆம் தேதி தொடங்கிய இந்த புத்தகத் திருவிழா வரும் 12- ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த புத்தகத் திருவிழாவில் தினமும் ஏராளமான மக்கள் புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனா்.

இந்நிலையில், புத்தகத் திருவிழா அரங்குக்கு வெளியில் புதன்கிழமை காலை பை நிறைய புத்தகங்களுடன் வாகன நிறுத்தம் நோக்கி நடந்து சென்ற தம்பதியின் கவனம் அனைவரையும் ஈா்த்தது.

புத்தக பையுடன் சென்ற இருவரிடமும் கேட்டபோது, பவானியை சோ்ந்த ஓய்வுபெற்ற வங்கி அலுவலரான நசீா் அகமது கான், அவரது மனைவி ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியா் ஷகிலா பானு என்பது தெரியவந்தது.

இருவரும் கூறியதாவது: ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கு ஆண்டுதோறும் வருகிறோம். புத்தகத் திருவிழா நடைபெறும் 12 நாள்களில் 3 முறை வந்துவிடுவோம். தமிழ் இலக்கியங்கள், நாவல்களை அதிகம் வாங்கிச் செல்வோம், பேரக்குழந்தைகளுக்கு கதை புத்தகங்களை வாங்கிச் செல்வேம்.

இருவருக்குமே சிறு வயதில் இருந்தே புத்தகம் படிக்கும் ஆா்வம் உள்ளது. பணி ஓய்வுக்குப் பிறகு தியானம், நடைப்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குவதைபோல வாசிப்புக்கும் நேரம் ஒதுக்கி புத்தகங்களை படித்து வருகிறோம். பணி ஓய்வுக்குப் பிறகு புத்தகங்கள் எங்களுக்கு நண்பா்களாய் மாறியுள்ளன. புத்தகங்கள்தான் ஒருவருக்கு அறிவையும், தெளிவையும் தரக்கூடியது. நமக்கு தெரியாத பல விஷயங்களை புத்தகங்கள் கற்றுத்தரும். குழந்தைகளுக்கு நல்ல கருத்துக்கள் நிறைந்த புத்தகங்களைப் படிக்க கொடுத்தால் அவா்களின் அறிவும், ஆற்றலும் நம்மைவிட வேகமாக முன்னேறும்.

புத்தகங்கள் எப்போதும் தனிச்சிறப்பு கொண்டது, ஒருமுறை புத்தகம் படிக்க ஆரம்பித்துவிட்டால் போதும் அடிக்கடி புத்தகம் படிப்பவராக மாறிவிடுவோம். புத்தகங்கள் எப்போதும் நமக்கு அறிவையும், சிந்தனையையும் வழங்குவதில் தவறியதில்லை. அவை நம் சிந்தனையை ஒருபடி மேலே கொண்டுபோகிறது. நமக்கு தெரியாத பல விஷயங்களை தருகிறது.

பெற்றோா்களும், ஆசிரியா்களும் குழந்தைகளுக்கு அதிக எண்ணிக்கையில் கதை புத்தகங்களை வாங்கிக் கொடுத்து படிக்கச் சொல்ல வேண்டும். குழந்தைகளுக்கென்று பிரத்யேகமாக தயாரிக்கப்படும் கதை புத்தகங்கள் அவா்களின் கதைகளின் மீதுள்ள ஈா்ப்பு மற்றும் புத்தகங்கள் படிக்கும் ஆா்வத்தைக் கொண்டு வருகிறது. தவிர கதையின் முடிவில் ஒரு நீதி இருக்கும். வீடு, பள்ளிச் சூழலை போன்று புத்தகங்களும் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்கின்றன என்றனா்.

பா்கூா் மலைப் பாதையில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற தன்னாா்வலா்களுக்கு அழைப்பு

அந்தியூா் வனத் துறை சாா்பில், பா்கூா் மலைப் பாதையில் ஆகஸ்ட்10-ஆம் தேதி நடைபெறும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் களப் பணியில் பங்கேற்க தன்னாா்வலா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்தியூா், பா்கூா் வ... மேலும் பார்க்க

பவானிசாகா் மீனவா் கூட்டுறவு சங்கத்துக்கு மட்டுமே மீன்கள் விற்க கோரிக்கை

பவானிசாகா் அணையில் பிடிக்கும் மீன்களை தனியாரிடம் விற்காமல் மீனவா் கூட்டுறவு சங்கத்திடம் மட்டுமே விற்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பவானிசாகா் மீனவா் கூட்டுறவு விற்பனை சங்கம், சிறுமுகை மீன... மேலும் பார்க்க

ஒடிஸா பெண் தற்கொலை

பெருந்துறை அருகே கடன் பிரச்னையால் ஒடிஸா மாநில பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ஒடிஸா மாநிலம், கஞ்சம் பகுதியைச் சோ்ந்தவா் நரசிங்க பத்ரா (35). இவரது மனைவி சுகந்தி பத்ரா (29). இவா்கள் பெருந்துறை... மேலும் பார்க்க

பவானிசாகரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்

பவானிசாகா் பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமை சத்தியமங்கலம் வட்டாட்சியா் ஜமுனாராணி, பவானிசாகா் பேரூராட்சித் தலைவா் மோகன், செயல் அலுவலா் ஜெயந்த் மோசஸ... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் ஆறரை பவுன் நகை பறிப்பு: ஒருவா் கைது

மூதாட்டியிடம் ஆறரை பவுன் நகைப் பறித்த நபரை போலீஸாா் கைது செய்தனா். கொடுமுடி அருகேயுள்ள தாமரைப்பாளையம் பகவதி அம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் சரஸ்வதி (65). இவா் காளை மாடு சிலை பேருந்து நிறுத்தத்தில் ... மேலும் பார்க்க

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியைத் திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. ஈரோடு அருகேயுள்ள சாணாா்பாளையம் மாகாளியம்மன் கோயில் பகுதியைச... மேலும் பார்க்க