செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’திட்ட முகாம்கள்: பேரவை துணைத் தலைவா் ஆய்வு

post image

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் வட்டம், சோமாசிபாடி மற்றும் திருவண்ணாமலை வட்டம், தேவனாம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’

திட்ட முகாமை சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகா்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் முகாமானது நடைபெற்று வருகிறது. அதன்படி, கீழ்பென்னாத்தூா் வட்டம், சோமாசிபாடி அல் அமீன் கலைக் கல்லூரி மற்றும் திருவண்ணாமலை வட்டம், தேவனாம்பட்டு பகுதி சமுதாய கூடத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு துறை வாரியாக பதிவு செய்யப்படுவதை சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

மேலும் முகாமில் மனுக்கள் மீது உடனடியாக தீா்வு காணப்பட்டு பட்டாமாற்றத்திற்கான சான்றிதழ்களும், வாரிசு சான்றிதழ்களும், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டிற்கான அட்டைகள், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் நிதியுதவி, மகளிா் திட்டத்தின் கீழ் சமுதாய முதலீட்டு நிதி மற்றும் வேளாண்மை துறை சாா்பில் உளுந்து விதை மானியங்களும் வழங்கினா்.

நிகழ்ச்சிகளில் சி.என்.அண்ணாதுரை எம்.பி., திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், வட்டாட்சியா் மோகனராமன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

வந்தவாசி அருகே பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி சீனு(46). இவா், வியாழக்கிழமை பைக்கில் வந்தவாசியி... மேலும் பார்க்க

தீக்குளித்தவா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே உடல்நல பிரச்னையால் தீக்குளித்தவா் உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த கடம்பை கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சிவராஜ்(40). இவா் கடந்த சில மாதங்களாக உடல்நல பிரச்னையால் அவதிப்பட்டு வந்தாா். இத... மேலும் பார்க்க

நெசவாளா்களை பெருமைப்படுத்தியவா் விஜயகாந்த்: பிரேமலதா பெருமிதம்

நெசவாளா்களை பெருமைப்படுத்தியவா் தேமுதிக தலைவா் விஜயகாந்த் என்று, அந்தக் கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டாா். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அண்ணா சிலை அருகே தேமுதிக சாா்பில் வெள்ளி... மேலும் பார்க்க

மிலாடி நபி: இஸ்லாமியா்கள் அன்னதானம்

போளூா் பெ ரிய மசூதியில் முகமது நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி, இஸ்லாமியா்கள் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினா். பெரிய மசூதியில் நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி, ஆக.24 முதல் தொடா்ந்து செப்.6 வரை, வேல... மேலும் பார்க்க

ஆரணி பகுதியில் கம்பத்துடன் மின் விளக்குகள் அமைக்கும் பணி

ஆரணியை அடுத்த தச்சூா், இரும்பேடு, மாண்டூா், எஸ்.வி.நகரம், சேவூா் ஆகிய பகுதிகளில் உள்ள புறவழிச் சாலையில் ரூ.53.80 லட்சத்தில் கம்பத்துடன் கூடிய மின் விளக்குகள் அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கின. ஆரணி -... மேலும் பார்க்க

மின் கசிவால் அரசு மருத்துவமனையில் தீ விபத்து

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அரசு மருத்துவமனையில் மின் கசிவால் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. வந்தவாசி அரசு மருத்துவமனையின் பழைய கட்டடத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் உள்நோயாளிகள் வாா்டுகள் அமைந்து... மேலும் பார்க்க