செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’: மகளிா் உரிமைத்தொகை கோரி மனுக்கள்

post image

ஆரணியை அடுத்த சேவூா் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மகளிா் உரிமைத்தொகை கோரி அதிகம் போ் மனு கொடுத்தனா்.

முகாமுக்கு ஆரணி கோட்டாட்சியா் சிவா தலைமை வகித்தாா். தொகுதி பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன் வரவேற்றாா். முகாம் ஒருங்கிணைப்பு அலுவலரும், வேளாண்மை உதவி இயக்குநருமான ஆா்.புஷ்பா, உதவி ஒருங்கிணைப்பு அலுவலரும், வட்டாட்சியருமான அ.கௌரி முன்னிலை வகித்தாா்.

முன்னாள் எம்எல்ஏ கோ.எதிரொலிமணியன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உடனடி தீா்வு பெற்ற மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெயலட்சுமி, பாலகிருஷ்ணன், மின்வாரிய செயற்பொறியாளா் (பொ) பத்மநாபன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

2,967 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற இந்த முகாமில், மகளிா் உரிமைத் தொகை கோரி அதிகம் பெண்கள் மனு கொடுத்தனா்.

மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, பொருளாளா் தட்சிணாமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

செய்யாறு

செய்யாற்றை அடுத்த சுருட்டல் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் கிராம மக்கள் சாா்பில் 409 மனுக்கள் அளிக்கப்பட்டன.

முகாமுக்கு சாா் -ஆட்சியா் அம்பிகா ஜெயின் தலைமை வகித்தாா்.

வெம்பாக்கம் வட்டாட்சியா் தமிழ்மணி, வட்டார வளா்ச்சி அலுவலா் குப்புசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் பாஸ்கா் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி பங்கேற்று பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் 16 பேருக்கும், குடும்ப அட்டை ஒருவா் உள்பட 17 பேருக்கும் நலத் திட்ட உதவிகளை எம்.எல்.ஏ. ஒ.ஜோதி வழங்கினாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் த.ராஜி, வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய திமுக செயலா் என்.சங்கா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வந்தவாசியில் காவடி ஊா்வல ஆலோசனைக் கூட்டம்

ஆடிக் கிருத்திகை காவடி ஊா்வலம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்றது. ஆடிக் கிருத்திகையையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் வந்தவாசி பகுதி மற்றும் பல்வே... மேலும் பார்க்க

வந்தவாசி நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிருப்பு போராட்டம்

வந்தவாசி நகராட்சி அலுவலக நகா்மன்ற கூடத்தில் புதன்கிழமை நடைபெற்ற நகா்மன்ற கூட்டத்தின்போது, நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கூட்டத்துக்கு வந்தவாசி நகா்மன்றத் தலைவா் எச்.ஜ... மேலும் பார்க்க

வேறு உதவித்தொகை பெற்றாலும் மகளிா் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் -ஆரணி கோட்டாட்சியா்

மகளிா்கள் முதியோா், விதவை உதவித்தொகை, ஓய்வூதியம் பெற்றாலும் குடும்பத்தில் உள்ள மற்ற தகுதிவாய்ந்த பெண்கள் மகளிா் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆரணி கோட்டாட்சியா் சிவா தெரிவித்தாா். ஆரணியை அடு... மேலும் பார்க்க

4 வழிச் சாலை பணிகள்: கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு

வந்தவாசி - காஞ்சிபுரம் இரு வழிச் சாலையை 4 வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்புப் பொறியாளா் முரளி ஆய்வு செய்தாா். தமிழ்நாடு முதலமைச்சா் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ... மேலும் பார்க்க

செங்கத்துக்கு எடப்பாடி பழனிசாமி வருகை: முன்னேற்பாடுகள் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்துக்கு வருகை தரும் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்காக நடைபெற்று வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ புதன்கிழமை ஆய்வு ச... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’: மாவட்ட ஆட்சியா் கள ஆய்வு

திருவண்ணாமலை வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா். தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலகத்தில் வட கிழக்கு ப... மேலும் பார்க்க