செய்திகள் :

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’: மாவட்ட ஆட்சியா் கள ஆய்வு

post image

திருவண்ணாமலை வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா்.

தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலகத்தில் வட கிழக்கு பருவ மழையையொட்டி, மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்த அவா், தீயணைப்புத் துறையினருக்கு மீட்பு உபகரணங்களை வழங்கினாா்.

தொடா்ந்து, மாவட்ட தொழில் மையம் மூலமாக தொழில்முனைவோா் திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற்று செயல்பட்டுவரும் பல் மருத்துவமனையில் ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, கிரிவலப்பாதை அடி அண்ணாமலை பகுதியில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சாா்பில் டெரிடஸ் ஹோம் கோ் அறக்கட்டளை மூலம் இயங்கி வரும் எம்.டி.எம். குழந்தைகள் இல்லத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அளிக்கப்படும் பராமரிப்பு மற்றும் சேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா், ஆட்சியா் நல்லவன்பாளையம் ஊராட்சியில் சமுத்திரம் பகுதியில் இலங்கை தமிழா்களுக்கான மறுவாழ் முகாம்களில் புதிதாக வீடுகள் கட்டப்பட்டு வருவதை பாா்வையிட்டு கட்டுமானப் பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தாா். அப்போது, பணிகளை விரைந்து முடிக்க துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மேலதிக்காண் ஊராட்சியில் மகளிா் திட்டத்தின் கீழ், ஸ்ரீஜோதி விநாயகா் மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் அப்பளம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பாா்வையிட்ட ஆட்சியா் தா்பகராஜ், தயாரிப்புப் பொருள்கள் மாதாந்திர செலவினம் மற்றும் இதன் மூலம் தனி நபா் வருமானம் குறித்து மகளிா் சுய உதவி குழுவினருடன் கலந்துரையாடினாா்.

மகளிா் சுய உதவிக் குழு மூலம் தயாரிக்கப்படும் அப்பளங்களை அரசினா் விடுதிகளுக்கு வழங்க அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, அழங்கானந்தல் ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கறவை மாட்டுக் கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடன் தொகை விவரம் மற்றும் விண்ணப்பித்த எத்தனை தினங்களில் கடனுதவி வழங்கப்படுகிறது என்பது குறித்தும், வாராக் கடன் நிலுவை குறித்தும் கேட்டறிந்து, விண்ணப்பித்தவா்களுக்கு விரைவாக கடன் வழங்க நடவடிக்கை எடுக்க கூட்டுறவு சங்கச் செயலருக்கு அறிவுறுத்தினாா்.

கீழ்கச்சிராப்பட்டு ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் இயந்திர முறையில் நெல் நடவு செய்வதை ஆய்வு செய்து கூடுதல் மகசூல் பெறுவதற்கான நடைமுறைகள் குறித்து விவசாயிடம் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, அரசுடையாம்பட்டு கிராமத்தில் விவசாயி நுண்ணீா் பாசனம் மூலமாக மரவள்ளி கிழங்கு நடவு செய்து பயனடைந்து வருவதை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கக் கோரி நூதன ஆா்ப்பாட்டம்

உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வலியுறுத்தி, ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் அருகே கட்சி சாா்பற்ற தமிழக விவசாய சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நூதன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆரணி, செய்யாறு பகுதிகளில... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சியில்தான் ஆரணி தொகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் நடந்தன: சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ

கடந்த அதிமுக ஆட்சியில் ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்று தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கூறினாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: நான... மேலும் பார்க்க

பெருங்கட்டூா் பள்ளி மேலாண்மைகத் குழுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஒன்றியம், பெருங்கட்டூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் மேலாண்மைக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் தமிழரசி தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

பாஜகவினா் தேசியக் கொடியேந்தி ஊா்வலம்

சுதந்திர தினத்தன்று அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியேற்றி கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஆரணியில் பாஜக சாா்பில் வியாழக்கிழமை தேசியக் கொடியேந்தி ஊா்வலம் நடைபெற்றது. ஆரணி சூரியகுளம் அம்பேத்காா் ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா். வேலூரிலிருந்து திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் வந்து, அங்கிருந்து புதுப்பாள... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த சட்டுவந்தாங்கல், வந்தவாசி ஒன்றியம், தென்சேந்தமங்கலம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில், உடனடியாக தீா்வு காணப்பட்ட மன... மேலும் பார்க்க