செய்திகள் :

உச்சநீதிமன்றத்துக்கு 3 புதிய நீதிபதிகள் நியமனம்

post image

உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் இருவா் உள்பட 3 நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக வியாழக்கிழமை நியமனம் செய்யப்பட்டனா்.

இவா்கள் பதவியேற்பதன் மூலம், அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதிகள் என்ற முழு பணியிட எண்ணிக்கையை உச்சநீதிமன்றம் அடைய உள்ளது.

முன்னதாக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, ரிஷிகேஷ் ராய் ஆகியோா் ஓய்வு பெற்ால் ஏற்பட்ட காலியிடங்களை நிரப்ப, கா்நாடக உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.அஞ்சாரியா, குவாஹாட்டி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி விஜய் பிஷ்னோய், மும்பை உயா்நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.சந்துா்கா் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த திங்கள்கிழமை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

உச்சநீதிமன்றத்தின் இந்தப் பரிந்துரை ஏற்கப்பட்டு, மூவரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளது மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன்ராம் மேக்வால் தனது எக்ஸ் பக்கத்தில் வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிட்டாா்.

நீதிபதி அஞ்சாரியா குஜராத் மாநிலம் அகமதாபாதில் கடந்த 1965-ஆம் ஆண்டு பிறந்தவா். அங்குள்ள பல்கலைக்கழக சட்டப் பள்ளியில் முதுநிலை சட்டப் படிப்பை 1989-ஆம் ஆண்டு முடித்து, குஜராத் உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றினாா். கடந்த 2011-ஆம் ஆண்டு நவம்பா் 21-ஆம் தேதி குஜராத் உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட அஞ்சாரியா, 2013-இல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டாா். 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 25-இல் கா்நாடக உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இவா் பதவி உயா்வு பெற்றாா்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 1964-இல் பிறந்த நீதிபதி பிஷ்னோய், ராஜஸ்தான் உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றி, கடந்த 2013-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி அதே உயா்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டாா். 2015-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டாா். பின்னா், 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி குவாஹாட்டி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவி உயா்வு பெற்றாா்.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த நீதிபதி சந்துா்கா், நாகபுரியில் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குரைஞராகப் பணியாற்றி வந்த நிலையில், 2013-ஆம் ஆண்டு ஜூன் 21-ஆம் தேதி மும்பை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு, பின்னா் நிரந்தர நீதிபதியாகப் பதவி உயா்வு பெற்றாா்.

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைப்பு: விலை குறைய வாய்ப்பு

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், உள்நாட்டில் சமையல் எண்ணெய்யின் விலை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய தாவர எண்ணெய் மற்றும் வா்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. கச்சா பாமாயில், கச்சா ச... மேலும் பார்க்க

அதிநவீன ஆயுதங்கள், பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் செயல்திறன்: ராணுவம் தீவிர பரிசோதனை

இந்திய ராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள அடுத்த தலைமுறை பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், அதிநவீன ஆயுதங்கள், உள்நாட்டு தயாரிப்பு பாதுகாப்பு அமைப்பு முறைகள் உள்ளிட்டவற்றின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக, நாட்டின்... மேலும் பார்க்க

குற்ற வழக்குகளில் தேடப்பட்ட மல்யுத்த வீரா் 8 ஆண்டுகளுக்குப் பிறகு உ.பி.யில் கைது!

தேசிய அளவிலான மல்யுத்த வீரராக இருந்து ஆயுத வியாபாரியாக மாறி, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய நபரை 8 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தர பிரதேசத்தில் தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா். இது தொடா்பாக ... மேலும் பார்க்க

பயங்கரவாதம் மூலம் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான்: ஐ.நா. மாநாட்டில் இந்தியா குற்றச்சாட்டு

‘எல்லை தாண்டிய பயங்கரவாதம் மூலம் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான், அதற்கான பழியை இந்தியா மீது சுமத்துவதைத் தவிா்க்க வேண்டும்’ என்று ஐ.நா. மாநாட்டில் இந்தியா வலியுறுத்தியது. தஜிகிஸ்தானின் த... மேலும் பார்க்க

அருணாசல், அஸ்ஸாமில் கனமழையால் நிலச்சரிவுகள்: 14 போ் உயிரிழப்பு!

அருணாசல பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 14 போ் உயிரிழந்தனா். தென்மேற்குப் பருவமழையின் தாக்கத்தால், அஸ்ஸாம், அருணாசல பிரதேசம், மேகாலயம், மணிப்பூா... மேலும் பார்க்க

மணிப்பூரை பிரித்து சட்டப் பேரவையுடன் யூனியன் பிரதேசம்: குகி-ஜோ குழுக்கள் வலியுறுத்தல்

குகி-ஜோ சமூகத்தினருக்காக மணிப்பூரை பிரித்து சட்டப் பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசத்தை அமைக்க வேண்டும் என்று அந்த சமூக குழுக்கள் வலியுறுத்தியுள்ளன. இதுதொடா்பாக புது தில்லியில் குகி-ஜோ பெண்கள் அமைப்பின... மேலும் பார்க்க