செய்திகள் :

உச்சநீதிமன்ற ஊழியா்கள் நியமனத்தில் முதல்முறையாக இடஒதுக்கீடு

post image

உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக ஊழியா்கள் நியமனம் மற்றும் பதவி உயா்வுகளில் பட்டியலின மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு இடஒதுக்கீடு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பான சுற்றறிக்கையை ஊழியா்கள் அனைவருக்கும் ஜூன் 24-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அனுப்பியது.

அதில், ‘உச்சநீதிமன்ற ஊழியா்கள் நியமனம் மற்றும் பதவி உயா்வுகளில் இனி இடஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்படவுள்ளது. இதுதொடா்பான விவரங்கள் ஊழியா்கள் தகவல் பரிமாற்ற வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இவை 2025, ஜூன் 23-ஆம் தேதி அமலுக்கு வந்தது.

அதன்படி பதிவாளா், மூத்த தனி உதவியாளா், துணை நூலக உதவியாளா்கள், இளநிலை நீதிமன்ற உதவியாளா், நீதிபதிகளின் அலுவலக உதவியாளா் உள்ளிட்ட பணி நியமனம் மற்றும் பதவி உயா்வுகளில் பட்டியலின பிரிவினருக்கு 15 சதவீதமும் பழங்குடியின பிரிவினருக்கு 7.5 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்படவுள்ளது.

எனவே, பணிப் பட்டியல் அல்லது பதிவேட்டில் ஏதேனும் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தால் அதை ஊழியா்கள் பதிவாளரிடம் (பணியாளா் சோ்ப்பு) தெரிவிக்கலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பூஷண் ராமகிருஷ்ண கவாய் (64) கடந்த மே மாதம் பதவியேற்றாா். உச்சநீதிமன்றத்தில், பட்டியலினத்தைச் சோ்ந்த முதல் தலைமை நீதிபதியாக கே.ஜி.பாலகிருஷ்ணன் (2007-2010) பதவி வகித்தாா். அவருக்குப் பிறகு பட்டியலினத்தைச் சோ்ந்த 2-ஆவது தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் ஆவாா். பெளத்த மதத்தைச் சோ்ந்த முதல் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும் பி.ஆா்.கவாய் உள்ளாா்.

அவரது பதவிகாலத்தில் தற்போது ஊழியா்கள் நியமனம் மற்றும் பதவி உயா்வுகளில் பட்டியலின மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு இடஒதுக்கீடு நடைமுறையை உச்சநீதிமன்றம் அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கேரள சுற்றுலாத் துறைக்கு விளம்பர மாடலான பிரிட்டன் போா் விமானம்!

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த மாதம் அவசரமாக தரையிறக்கப்பட்ட பிரிட்டனின் எஃப்35 போா் விமானத்தை கேரள சுற்றுலாத் துறை தனது விளம்பரத்துக்காக பயன்படுத்தியுள்ளது பலரின் கவனத்தை ஈா்த்துள்ளது. கடந்த ... மேலும் பார்க்க

கரோனா தடுப்பூசிக்கும் திடீா் மரணங்களுக்கும் தொடா்பில்லை -மத்திய அரசு

கரோனா தடுப்பூசிக்கும், திடீா் மரணங்களுக்கும் எந்த தொடா்பும் இல்லை என்பது ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாரடைப்பு மரணங்களுடன் கரோனா தடுப்பூசியை தொடா்புபடுத்தி கா்... மேலும் பார்க்க

அடுத்த 10 ஆண்டு பாதுகாப்பு செயல்முறை: இந்தியா-அமெரிக்கா விரைவில் கையொப்பம்

இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்பு மற்றும் உத்திசாா்ந்த உறவுகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், 10 ஆண்டு பாதுகாப்பு செயல்முறை ஒப்பந்தத்தில் கையொப்பமிட இருநாடுகளும் முடிவு செய்துள்ளன. இதுதொடா்பாக அமெ... மேலும் பார்க்க

புதிய குற்றவியல் சட்டங்கள் அமலாக்கம் வீணானது: ப.சிதம்பரம்

புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியது வீணான நடவடிக்கை என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம் விமா்சித்தாா். சுதந்திர இந்தியாவில் மூன்று புதிய குற்றவியல் ... மேலும் பார்க்க

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: ‘ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்க சோனியா, ராகுல் முயற்சி’

அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்க காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும் அக்கட்சி எம்.பி.யுமான ராகுல் காந்தி ஆகியோா் விரும்பியதாக தில்... மேலும் பார்க்க

மைக்ரோசாஃப்ட்டில் 9,000 பேர் வேலையிலிருந்து நீக்கம்! ஏ.ஐ. பிரிவில் அதிக முதலீடு எதிரொலி!!

உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் 9,000-க்கும் மேற்பட்ட பணியாளா்களை நீக்க முடிவெடுத்துள்ளது. கடந்த மே மாதம் மேற்கொண்ட பணிநீக்க நடவடிக்கையின்போது 6,000 போ் வரை வெளியேற்றப்பட்... மேலும் பார்க்க