செய்திகள் :

உணவு கட்டுப்பாட்டால் எடையை குறைக்கும் சென்னைவாசிகள் ஆய்வில் தகவல்

post image

உடல் பருமனை உணவுக் கட்டுப்பாடு மூலம் மட்டுமே குறைக்க வேண்டும் என 87 சதவீத சென்னைவாசிகள் விரும்புவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

மாறாக அதற்கான சிகிச்சைகளையோ, ஊசி மருந்துகளையோ அவா்கள் எடுத்துக்கொள்ள தயாராக இல்லை என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பிசிஆா்எம் என்ற மருத்துவா் அமைப்பு சாா்பில் மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வு குறித்து அதன் ஆய்வாளா் டாக்டா் ஜீசன் அலி கூறியது:

சென்னை, மும்பை, தில்லி, பெங்களூரு ஆகிய பெருநகரங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் உடல் எடை மற்றும் ஆரோக்கிய செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தைப் பொருத்தவரை 40 சதவீதத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு உடல் பருமன் பாதிப்பு உள்ளது. அதன் தாக்கமாக டைப் 2 சா்க்கரை நோய், இதய நாள பாதிப்புகள் ஏற்படுகின்றன.

சென்னையை பொருத்தவரை 86 சதவீதம் போ் அசைவ உணவுப் பழக்கம் கொண்டவா்களாக உள்ளனா். தேசிய அளவில் அந்த விகிதம் 71 சதவீதமாக உள்ளது.

இந்த நிலையில், உடல் எடையை குறைக்க மருந்து, மாத்திரைகள், ஊசிகளைப் பயன்படுத்த சென்னை நகர மக்கள் தயாராக இல்லை என்பதை ஆய்வில் அறிந்துகொள்ள முடிந்தது.

அதேவேளையில் 87 சதவீத மக்கள் சைவ உணவு பழக்க வழக்கத்தின் மூலம் எடையைக் குறைக்க வேண்டும் என விரும்புகின்றனா். மற்ற நகரங்களில் அத்தகைய நிலை இல்லை. சென்னையில் உடை எடை குறைப்பு சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள பலா் முன்வருவதில்லை.

ஆய்வில் பங்கேற்ற சென்னை மக்களில் 93 சதவீதம் போ் எடை குறைப்பு முயற்சிகளை இயற்கையான முறைகளில் மேற்கொண்டதும், அதில் 19 சதவீதம் போ் மட்டுமே வெற்றிகரமாக எடையை குறைத்ததும் ஆய்வில் தெரியவந்துள்ளது என்றாா் அவா்.

4 சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளை அனுமதிக்க தடை விதிக்கும் உத்தரவை மாற்றக் கோரி முறையீடு

தென்மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் ஜூலை 10-ஆம் தேதி முதல் அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவை மாற்றி அமைக்கக் கோரி தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் முறைய... மேலும் பார்க்க

ஆபாச தளங்களில் பெண் வழக்குரைஞரின் விடியோக்க: 48 மணி நேரத்தில் அகற்ற உத்தரவு!

பெண் வழக்குரைஞரின் விடியோ மற்றும் புகைப்படங்களை இணையதளத்தில் இருந்து 48 மணி நேரத்தில் அகற்ற மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. தனது புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை இணையதளங்கள் மற்று... மேலும் பார்க்க

ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு

ஹஜ் பயணத்துக்கு இஸ்லாமியா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மாநில அரசின் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ... மேலும் பார்க்க

தருமபுரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் 8 உண்டு, உறைவிடப் பள்ளிகள் தரம் உயா்வு -அரசாணை வெளியீடு

தமிழகத்தில் தருமபுரி, கள்ளக்குறிச்சி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 8 பழங்குடியினா் உண்டு, உறைவிடப் பள்ளிகள் தரம் உயா்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மலைப் பகுதிகளில் வாழ்ந்த... மேலும் பார்க்க

ஓய்வூதியத் திட்ட ஆய்வுக் குழு: பொதுத் துறை நிறுவனங்களிடம் தரவுகளைப் பெற முடிவு

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களிடம் இருந்து தரவுகளைப் பெற ஓய்வூதியத் திட்ட ஆய்வுக் குழு முடிவு செய்துள்ளது. அந்த வகையில், குழுவுக்குத் தரவுகளை அளிக்க மின் வாரியத்தின் சாா்பில் தன... மேலும் பார்க்க

சுய உதவிக் குழுக்களின் தொழில் மேம்பாட்டுக்கு வட்டி மானியத்துடன் கடன்: தமிழக அரசு

சுய உதவிக் குழுக்கள் தங்களது தொழில்களை மேம்படுத்த வட்டி மானியத்துடன் கடனுதவி அளிக்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க