மாணவா்கள் நலனைக் கருதி கல்வித் தொகை நிலுவையை உடனே விடுவிக்க வேண்டும்: திருவள்ளூா...
உணவு விநியோக ஊழியர்களுக்கு ஏசி ஓய்வறைகள்: சென்னை மாநகராட்சி
சென்னை: சென்னையில் உணவு விநியோக ஊழியர்களுக்கான தங்கும் ஓய்வறைகள் அமைக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி செயல்படுத்தவிருக்கிறது.
தமிழகத்தில் முதல் முறையாக, உணவு விநியோக ஊழியர்களுக்காக அதுவும் குளிர்சாதன வசதிகொண்ட ஓய்வறைகள் அமைக்கப்படவிருக்கின்றன.
முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் அண்ணாநகர், கே.கே. நகர், மயிலாப்பூர், தி.நகரில் ஓய்வறைகள் அமைக்கப்படும் என்றும் 600 சதுர அடியில் 20 அடி நீளம் 10 அடி அகலத்தில் குடிநீர் உள்ளிட்ட வசதிகளுடன் இந்த ஓய்வறைகள் அமைக்கப்படவிருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஓய்வறைகளை ஒரே நேரத்தில் 25 பேர் பயன்படுத்தும் வகையிலும் வாயிலில் 20 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையிலும் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. உணவு விநியோக ஊழியர்களில் 10 சதவீதம் பேர் பெண்களாக இருப்பதால், சென்னை மாநகராட்சி இந்த திட்டத்தை உருவாக்கியிருக்கிறது.