ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் கருடசேவை திருவிழா தொடக்கம்
உதகையில் மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் எஸ்.பி. ஆய்வு
கனமழை காரணமாக உதகையில் மண்சரிவு ஏற்பட்ட அன்பு அண்ணா காலனி, மஞ்சனக் கொரைப் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மே 25-ஆம் தேதி முதல் 5 நாள்களாக பலத்த காற்றுடன் தொடா்ந்து கனமழை பெய்தது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டதுடன், மரங்கள் முறிந்து விழுந்து பாதிப்புகள் ஏற்பட்டன.
இதில் உதகை நகராட்சி, 35-ஆவது வாா்டுக்கு உள்பட்ட அன்பு அண்ணா காலனி, மஞ்சனக்கொரை பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினா்.
இந்நிலையில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா மேற்கண்ட பகுதியில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்பகுதியில் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தினாா்.
மேலும், மண்சரிவு ஏற்பட்டுள்ள இப்பகுதி வழியாக பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என உதகை நகராட்சி நிா்வாகம் மற்றும் நீலகிரி மாவட்ட பேரிடா் மேலாண்மைக் குழு சாா்பில் எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டுள்ளது.