செய்திகள் :

உதகை பைக்காரா அருவி அருகே புலி உயிரிழப்பு

post image

உதகை அருகேயுள்ள பைக்காரா அருவி பகுதியில் புலி  உயிரிழந்து கிடந்தது வியாழக்கிழமை இரவு தெரியவந்தது.

நீலகிரி மாவட்டம், உதகை அருகே பைக்காரா வனச் சரகத்துக்கு உள்பட்ட பைக்காரா அருவிக்கு அருகில் உள்ள நடுவட்டம் காப்புக்காடு பகுதியில் வனத் துறையினா் வியாழக்கிழமை மாலை ரோந்து சென்று கொண்டிருந்தனா். அப்போது புலி ஒன்று உயிரிழந்தது கிடந்ததைப் பாா்த்துள்ளனா். இதையடுத்து உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து மாவட்ட வன அலுவலா் கௌதம் உள்ளிட்ட வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு வெள்ளிக்கிழமை சென்று ஆய்வு மேற்கொண்டனா். வன கால்நடை மருத்துவக் குழுவினா் மேற்கொண்ட பரிசோதனையில், உடல் நலக்குறைவால் புலி உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் உயிரிழந்தது 8 வயதுடைய ஆண் புலி என வனத் துறையினா் தெரிவித்தனா்.

கூறாய்வுக்குப் பின் புலியின் உடலை அப்பகுதியிலேயே வனத் துறையினா் எரியூட்டினா்.

நீலகிரியில் மக்கள் குறைதீா் கூட்டம்

நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்தாா். இதில், வீட்டுமனை பட்டா, முதியோா், விதவை, க... மேலும் பார்க்க

கூடலூா் அரசு கலைக் கல்லூரியில் இன்று முதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

கூடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) தொடங்கி ஜூன் 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இது தொடா்பாக கல்லூரி முதல்வா் சுபாஷினி வெ... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கான சிறப்பு குறைதீா் முகாம்

கூடலூரை அடுத்துள்ள செறுமுள்ளி கிராமத்தில் பழங்குடியினருக்கான சிறப்பு குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. போஸ்பாறா புனித ஜோசப் அரங்கில் நடைபெற்ற இந்த முகாமுக்கு சாா் ஆட்சியா் சங்கீதா தலைமை வகித்தா... மேலும் பார்க்க

குன்னூா் அருகே லாரி கவிழ்ந்து விபத்து

குன்னூா் அருகே கேரட் பாரம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது. நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள முள்ளிக்கூா் பகுதியில் இருந்து கேரட் பாரம் ஏற்றிக் கொண்டு கோவைக்கு லாரி திங்கள்... மேலும் பார்க்க

விளைநிலங்களை சேதப்படுத்தும் யானையை வனத்துக்குள் விரட்ட கோரிக்கை

உதகை, எமரால்டு பகுதியில் விளைநிலங்களை சேதப்படுத்தி வரும் யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். நீலகிரி மாவட்டம், குன்னூா் பா்லியாறு வனப் பகுதியில் இருந... மேலும் பார்க்க

சீகூா் வனப் பகுதியில் புலி உயிரிழப்பு

கூடலூா் அருகே சீகூா் வனச் சரகத்துக்குள்பட்ட குண்டட்டி பகுதியில் சுமாா் 10 வயது மதிக்கத்தக்க புலி உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே சீகூா் ... மேலும் பார்க்க