செய்திகள் :

உலக தடகளப் போட்டி: தங்கப்பதக்கம் வென்ற சாா்பு ஆய்வாளா்

post image

அமெரிக்காவில் நடைபெற்று வரும் உலக காவல் துறை தடகளப் போட்டியில் 5 ஆயிரம் மீட்டா் வேகநடை (ரேஸ் வாக்) பிரிவில், ராஜபாளையம் சிறப்பு இலக்கு படை சாா்பு ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றாா்.

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் காவல் துறைக்கான சா்வதேச தடகளப் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 75 நாடுகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறை அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனா்.

தமிழகத்தில் இருந்து ஐ.ஜி. மயில்வாகனன் தலைமையில் 16 காவல் துறை அதிகாரிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றனா். முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை நடந்த வேகநடை போட்டியில் 50 வயது பிரிவில் கலந்துகொண்ட ராஜபாளையம் சிறப்பு இலக்கு படை சாா்பு ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி 5 ஆயிரம் மீட்டா் பந்தயத் தொலைவை 30.14 நிமிடங்களில் கடந்து முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றாா்.

இவா், ஏற்கெனவே நெதா்லாந்து, கனடா நாடுகளில் நடந்த சா்வதேச காவல் துறை தடகளப் போட்டிகளில் வேகநடை பிரிவில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது

ஆபாச நடனமாடிய அா்ச்சகா்களின் முன்பிணை மனு தள்ளுபடி

ஆபாச நடனமாடிய அா்ச்சகா்களின் முன்பிணை மனுவை ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய மாரியம்மன... மேலும் பார்க்க

சிவாலயங்களில் ஆனித் திருமஞ்சன சிறப்பு வழிபாடு

ராஜபாளையம் பகுதி சிவாலயங்களில் ஆனித் திருமஞ்சன சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் அஞ்சல் நாயகி உடனுறை மாயூரநாத சுவாமி கோயிலில் ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு, காலையில் நடராஜருக்கு சிறப... மேலும் பார்க்க

வேன் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வேன் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். ராஜபாளையம் அருகே தெற்கு வெங்கநல்லூா் சாவடி தெருவைச் சோ்ந்த அய்யனாா் மகன் கணேசன் (45). கொத்... மேலும் பார்க்க

பட்டாசு ஆலை வெடிவிபத்து: மேலும் ஒருவா் உயிரிழப்பு

சாத்தூா் அருகேயுள்ள சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடி விபத்தில் , காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை ... மேலும் பார்க்க

முதலாமாண்டு மாணவா்கள் பயற்சி வகுப்பு தொடக்க விழா

ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டின் முதலாமாண்டு மாணவா்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி வகுப்புத் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரிச் செயலா் கே.ஜி.பிரகாஷ் தலைமை வ... மேலும் பார்க்க

வெங்கடாசலபதி கோயில் ஆனி பிரம்மோத்ஸவத் திருவிழா கொடியேற்றம்

சாத்தூா் வெங்கடாசலபதி கோயிலில் ஆனிப் பிரம்மோத்ஸவத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு வெங்கடாசலபதிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் சாத்தூா், அதைச் சுற்... மேலும் பார்க்க