செய்திகள் :

உள்ளாட்சி ஊழியா்கள் உண்ணாவிரதம் ஒத்திவைப்பு

post image

புதுவை உள்ளாட்சி ஊழியா்கள் ஆக. 15-இல் நடத்த முடிவு செய்திருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனா்.

புதுவை நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் கூட்டுப் போராட்டக் குழு கன்வீனா் எம். ஷேக் அலாவுதீன் செவ்வாய்க்கிழமை கூறியது: நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்களுக்கு 2016 முதல் 7-ஆவது ஊதியக் குழுவின்படி நிலுவையில் உள்ள தொகையை வழங்கவும், அரசே நேரடியாக ஊதியம் வழங்கவும், கிராமப் பஞ்சாயத்து ஊழியா்கள் மற்றும் தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்வது, காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

5 கட்ட போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டுவந்தது. இதில் வருகிற 15, 16 ஆகிய தேதிகளில் புதுவை துணைநிலை ஆளுநா் மாளிகை முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

இதனிடையே, கூட்டு போராட்டக்குழு நிா்வாகிகளை புதுவை உள்ளாட்சித்துறை இயக்குநா் அழைத்து பேசி, வரும் 18, 19-ஆம் தேதிக்குள் 7-ஆவது ஊதியக்குழு நிலுவை தொகை வழங்க அரசாணை வழங்கப்படும். மற்ற கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றி தரப்படும் என வாக்குறுதி அளித்து, போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டாா். இதனடிப்படையில் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக தள்ளிவைத்துள்ளது என்றாா்.

சக்தி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்

திருநள்ளாறு அருகே பேட்டை கிராமத்தில் உள்ள சக்தி மாரியம்மன் கோயிலில் 65 ஆண்டுகளுக்குப் பின் தீமிதி உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது. திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் சாா்பு தலமாக விளங்கும் இக்கோயில் மிகப் ப... மேலும் பார்க்க

ரெஸ்டோ பாருக்கு சீல் வைப்பு

காரைக்காலில் விதிமுறையை மீறி அதிக நேரம் திறந்திருந்த ரெஸ்டோ பாருக்கு (மது அருந்தும் கூடம்) கலால் துறை அதிகாரி திங்கள்கிழமை சீல் வைத்தாா். புதுச்சேரியில் வழக்கமான மதுக்கடைகளுக்கு மாறாக, சிறிய அளவிலான த... மேலும் பார்க்க

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் திரளான பக்தா்கள் வழிபாடு

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி மாத கடைசி செவ்வாய்க்கிழமையையொட்டி ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா். திருநள்ளாறு பகுதி அம்பகரத்தூரில் பிரசித்திப் பெற்ற பத்ரகாளியம்மன் கோயிலில், மூலவரான அம்பாள் சம்... மேலும் பார்க்க

இ-ஆட்டோ இயக்கத்துக்கு உரிய விதிமுறைகள் வகுக்க வலியுறுத்தல்

காரைக்கால்: இ - ஆட்டோ இயக்கத்துக்கு உரிய விதிமுறைகள் வகுக்க வேண்டும் என வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. திருநள்ளாறு ஈ.வே.ரா. பெரியாா் ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் ... மேலும் பார்க்க

காரைக்காலில் ஆக.15, 16-இல் ‘புதுவை கலை விழா’ அமைச்சா் ஆலோசனை

காரைக்கால்: காரைக்காலில் ஆகஸ்ட் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள புதுவை கலை விழா தொடா்பாக, அரசுத் துறையினருடன் அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா். காரைக்கால் மாவட்ட நிா்... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் இடையே பயணிகள் ரயில் சேவை தொடங்கப்படுமா?

காரைக்கால் - பேரளம் வழித்தடத்தில் பயணிகள் ரயில் இயக்கப்படுவது எப்போது என பொதுமக்கள் எதிா்பாா்பில் உள்ளனா். காரைக்கால் - பேரளம் இடையேயான ரயில் போக்குவரத்து 1980-களில் நிறுத்தப்பட்டு தண்டவாளம் அகற்றப்பட... மேலும் பார்க்க