செய்திகள் :

எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார்: பிரேமலதா விஜயகாந்த்

post image

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை வைத்து கூட்டணி அமைத்ததாகவும், ஆனால் அவர் முதுகில் குத்திவிட்டதாக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விமர்சித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் நடந்த வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் கூட்டணி குறித்த ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிட்டு கையெழுத்திடுவதில்லை.

அதேபோலதான் கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தபோது, தேமுதிக உடன் கூட்டணி ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிடாமல் கையெழுத்திட்டார். அதனால்தான் நாம் ஏமாந்துவிட்டோம்.

மேலும், தேமுதிகவுக்கு உறுதியளிக்கப்பட்ட தொகுதிகள் மற்றும் ஆதரவு வழங்கப்படவில்லை என்றும், இதனால் தேமுதிக தொண்டர்கள் ஏமாற்றப்பட்டனர்.

முதல்வராக இருந்தவர், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என நம்பியதாகவும், ஆனால் அவர் முதுகில் குத்திவிட்டார். மாநிலங்களவை உறுப்பினர் சீட்டுக்கு எழுதி கொடுத்தது உண்மைதான். எங்களிடம் ஆதாரம் இருந்தும் ஒரு அரசியல் கட்சி தலைவர் என்ற மாண்பில் அதை வெளியிடவில்லை என கூறினார் .

எடப்பாடி பழனிசாமியின் பிரசார கூட்டங்களுக்கு காசு, மது கொடுத்துதான் ஆள்கள் அழைத்து வரப்படுகிறார்கள் என எடப்பாடி பிரசார பயணம் குறித்து விமர்சனம் செய்த பிரேமலதா, நமது கூட்டத்திற்கு கேப்டன் மீதுள்ள அன்பால் மக்கள் திரண்டு வருகின்றனர் என்று கூறினார்.

உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு எதிராக திமுக அரசு: அண்ணாமலை கண்டனம்

AIADMK General Secretary EPS said that he had formed an alliance with him, but he stabbed him in the back.

உள்கட்சி பூசல்களை களைய வேண்டும்: தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்

தமிழ்நாடு பேரவைத் தேர்தலையொட்டி உள்கட்சி பூசல்களைக் களைய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர்களுக்கு அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்த... மேலும் பார்க்க

வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் வேலைநிறுத்த போராட்டம்: வெறிச்சோடிய அலுவலகம்

வந்தவாசி: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினரின் வேலைநிறுத்த போராட்டத்தை ஒட்டி வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் ஊழியா்களின்றி புதன்கிழமை வெறிச்சோடி காணப்பட்டது. அலுவலக உதவியாளா் காலி பணியிடங்களை ... மேலும் பார்க்க

வருவாய்த்துறை அலுவலர் சங்கம் நடத்தும் 48 மணி நேரம் போராட்டத்தால் வெறிச்சோடிய அலுவலகம்!

விராலிமலை: ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை, இலுப்பூர் தாலுகா அலுவலகங்களில் 56 பேர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.தமிழக வருவா... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை: சுகாதாரத் துறை

சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி வருவது இன்புளுன்சா ஏ வகை வைரஸ் காய்ச்சல் மட்டுமே தவிர, புதிய வகை வைரஸ் தொற்று இல்லை என விளக்கம் அளித்துள்ளது சுகாதாரத் துறை, மக்கள் அதிகம் கூடும்... மேலும் பார்க்க

இரு காசுகளை விழுங்கிய 2 ஆம் வகுப்பு மாணவி! விரைந்து செயல்பட்டுக் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்!

இரண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி, இரண்டு காசுகளை விழுங்கிய நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவர்கள் துரிதமாக செயல்பட்டு குழந்தையின் உயிரைக் காப்பாற்றினர்.திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் க... மேலும் பார்க்க

யுஜிசி பாடத்திட்டத்தை கண்டித்து மன்னா் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் நகல் எரிப்பு போராட்டம்

தஞ்சாவூர்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள யுஜிசி பாடத்திட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களின் பெயர்களை மறைத்து ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த தலைவர்களை இணைத்து இருப்பதற்கு கண்டனம் தெரிவித்த... மேலும் பார்க்க