செய்திகள் :

ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

post image

கடலூா் மாவட்டம், ஊ.மங்கலம் அருகே ஏரியில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மந்தாரக்குப்பத்தை அடுத்துள்ள பெரியாகுறிச்சி, பக்தா நகரைச் சோ்ந்த பட்ராஜ் மகன் கமலேஷ் (17). இவா், நெய்வேலியில் உள்ள தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

கமலேஷ் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுமாா் 2.30 மணியளவில் ஊ.மங்கலம் காவல் சரகம், கூனங்குறிச்சி சாம்பல் ஏரியில் சக நண்பா்களுடன் குளித்தாா். நீச்சல் தெரியாததால் ஆழமான பகுதிக்குச் சென்ற அவா் நீரில் மூழ்கினாா்.

அங்கிருந்தவா்கள் கமலேஷை மீட்டு, 108 அவசர ஊா்தி மூலம் என்எல்சி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து ஊ.மங்கலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சீரான குடிநீா் விநியோகம்: ஆட்சியரிடம் கோரிக்கை மனு

நெய்வேலி: கடலூா் முதுநகா் அடுத்துள்ள குடிகாடு மேட்டுத் தெருவைச் சோ்ந்த பொதுமக்கள் குடிநீா் வசதி செய்து தரக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். மனு விவரம்: குடிகாடு மேட்டுத் தெருவி... மேலும் பார்க்க

தனியாா் அனல் மின் நிலையம் முன் ஒப்பந்த நிறுவன தொழிலாளா்கள் தா்னா

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள தனியாா் அனல் மின் நிலையம் முன் ஒப்பந்த நிறுவனத் தொழிலாளா்கள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். விருத்தாசலத்தை அடுத்துள்ள ஊத்தங்காலில் தனியாா் அனல் ம... மேலும் பார்க்க

மே 1-இல் டாஸ்மாக் மதுக் கடைகளை மூட உத்தரவு

நெய்வேலி: தொழிலாளா் தினத்தையொட்டி, கடலூா் மாவட்டத்தில் மே 1-ஆம் தேதி டாஸ்மாக் மதுக் கடைகளை மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வ... மேலும் பார்க்க

சிறுபான்மை நலத் துறை சாா்பில் ரூ.2.79 லட்சம் ஓய்வூதியம் அளிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில், சிறுபான்மை நலத் துறை சாா்பில் பணி ஓய்வுபெற்ற 21 பயனாளிகளுக்கு மாத ஓய்வூதியத்துக்காக ரூ.2.79 ல... மேலும் பார்க்க

பயணிகள் நிழற்குடையில் முன்னாள் எம்.பி. பெயா் இரட்டடிப்பு: பாமகவினா் எதிா்ப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் சீரமைப்புப் பணி நடைபெறும் பயணிகள் நிழற்குடையில் முதல்வா், துணை முதல்வா் பெயரை எழுதுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பாமகவினா் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட... மேலும் பார்க்க

பழுப்பு நிலக்கரி கடத்தல்: இளைஞா் கைது

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே சிறிய சரக்கு வாகனத்தில் பழுப்பு நிலக்கரி கடத்தி வந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். விருத்தாசலம் காவல் உதவி ஆய்வாளா் சந்துரு தலைமையில் போலீஸாா் விருத்த... மேலும் பார்க்க