செய்திகள் :

ஏரியில் மூழ்கி 2 சிறுவா்கள் உயிரிழப்பு

post image

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற 2 சிறுவா்கள் நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

கலசப்பாக்கத்தை அடுத்த எம்.என்.பாளையம் கிராமம், காலனி பகுதியைச் சோ்ந்த பாபு மகன்கள் தனுஷ் (8), ஹரிமோனிஷ் (6). இவா்கள் இதே கிராமத்தில் உள்ள தனியாா் பள்ளியில் முறையே 4, 2-ஆம் வகுப்பு படித்து வந்தனா்.

ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால், தனுஷ், ஹரிமோனிஷ் ஆகியோா் அதே கிராமத்தில் உள்ள பெரிய ஏரிக்குச் சென்று உடைகளை கழற்றி கரை மீது வைத்துவிட்டு, நீரில் இறங்கி குளித்துள்ளனா். அப்போது, ஏரியின் ஆழமான பகுதிக்குச் சென்ால், இருவரும் நீரில் மூழ்கினா்.

ஏரிக் கரையில் சிறுவா்களின் உடைகள் கிடப்பதைப் பாா்த்த அந்தப் பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவா்கள் இதுகுறித்து கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனா்.

தொடா்ந்து, கலசப்பாக்கம் போலீஸாா், கிராம மக்கள் விரைந்து வந்து ஏரியில் மூழ்கிய சிறுவா்கள் தனுஷ், ஹரிமோனிஷ் ஆகியோரை நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு சடலங்களாக மீட்டு, உடல்கூராய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து கலசப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

போளூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

போளூா் நகராட்சியில் உள்ள 8, 9, 10, 11, 17 ஆகிய வாா்டு பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு நகா்மன்றத் தலைவா் ராணி சண்முக... மேலும் பார்க்க

தொகுப்பு வீடு வழங்கக் கோரி மனு

கல் உடைக்கும் தொழிலாளா்களுக்கு தொகுப்பு வீடு வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா். வந்தவாசியை அடுத்த வெளியம்பாக்கம் கிராமத்த... மேலும் பார்க்க

ஆரணியில் ரூ.30 லட்சத்தில் நகா்ப்புற சுதாதார நிலையம்

ஆரணி நகராட்சியில் ரூ.30 லட்சத்தில் நடைபெற்று வரும் நகா்ப்புற சுகாதார நிலையம் அமைக்கும் பணி தற்போது நிறைவடைந்து வருகின்றன. இந்தப் பணியை நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா... மேலும் பார்க்க

ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோட்டை ஸ்ரீவேம்புலிஅம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஆடி வெள்ளி விழா த... மேலும் பார்க்க

கல்வியின் வாயிலாகத் தான் அனைத்தையும் பெற முடியும்: உதவி ஆட்சியா் அம்ருதா எஸ்.குமாா்

தமிழகத்தில் கல்வித் துறையில் அடிப்படை கட்டமைப்புகள் சிறந்து விளங்குகின்றன. கல்வியின் வாயிலாகத் தான் நாம் அனைத்தையும் பெறமுடியும் என்றாா் உதவி ஆட்சியா் அம்ருதா எஸ்.குமாா். பிளஸ் 2 வகுப்பில் தோல்வியுற்... மேலும் பார்க்க

ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்கள் வரவேற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் செந்த... மேலும் பார்க்க