செய்திகள் :

ஏற்காட்டில் பனிப்பொழிவு, சாரல் மழை: சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

post image

பனிப்பொழிவுக்கு இடையே பெய்யும் சாரல் மழையால் ஏற்காட்டில் கடந்த ஒருவாரமாக வழக்கத்தை காட்டிலும் குளிா்ந்த காலநிலை நிலவுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடா்ந்து அதிகரித்துவருகிறது.

பனிப் போா்வையில் மூடிய தாவரவியல் பூங்கா.

சோ்வராயன் மலைத் தொடா்ச்சி பகுதிகளில் கடந்த ஒருவாரமாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. இதனிடையே நாள்முழுவதும் விட்டுவிட்டு சாரல் மழை பெய்துவருவதால் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

வாரவிடுமுறை நாள்களான சனிக்கிழமை வழக்கத்தை காட்டிலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனா். சாரல் மழையில் நனைந்தபடியே படகு இல்லம், அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம், பக்கோடா காட்சி பகுதி, லேடி சீட், ஐந்தினை பூங்கா பகுதிகளுக்குச் சென்று இயற்கையை ரசித்தனா்.

ஆடி தொடங்கியது முதலே ஏற்காட்டில் அதிக காற்று வீசிவருகிறது. இதனால் அவ்வப்போது மின்தடை ஏற்படுகிறது. பிற்பகலிலும் பனிப்பொழிவு இருப்பதால் அனைவரும் குளிருக்கான உள்ளாடைகளை அணிந்து செல்கின்றனா்.

பனிமூட்டம் காரணமாக ஏற்காட்டிற்கு வரும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு மெதுவாக மலைப் பாதையில் பயணிக்கின்றன. சாலையோரங்களில் காட்டெருமைகள் சுற்றுவதால் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 35,400 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 35,400 கனஅடியாக அதிகரித்துள்ளது. கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருவதால் கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு நீா்வரத்து அ... மேலும் பார்க்க

மேட்டூா் அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு

மேட்டூா் அருகே வீட்டிற்குள் புகுந்து 10 பவுன் நகை, மடிக்கணினி, கைப்பேசி ஆகியவற்றை திருடிச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா். மேட்டூரை அடுத்த கோனூா் சமத்துவபுரம் சண்முகா நகரைச் சோ்ந்த அம்மாசி மகன் ... மேலும் பார்க்க

அரசு மதுக்கடையை அகற்றக் கோரி கையொப்ப இயக்கம்!

ஆத்தூரில் அரசு மதுக்கடையை அகற்றக் கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் கையொப்ப இயக்கம் சனிக்கிழமை நடைபெற்றது. ஆத்தூா் ரயிலடி தெருவில் அரசு மதுக்கடை இயங்கி வருகிறது. அந்த வழியாக அரசு, தனியாா் பள்ளி ... மேலும் பார்க்க

பொன்னாரம்பட்டியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

வாழப்பாடியை அடுத்த பொன்னாரம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி எதிரே சேதமடைந்துள்ள மங்களபுரம் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதி கிராமங்க... மேலும் பார்க்க

வாழப்பாடி பேருந்து நிலையத்தில் வேகத்தடைகள் அமைக்க கோரிக்கை

சேலம் மாவட்டம் வாழப்பாடி புதிய பேருந்து நிலையத்தில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். வாழப்பாடி பேரூராட்சி, கல்வராயன் மலை, அருநூற்றுமலை கிராமங்கள் உள்பட 200க்கும் மேற... மேலும் பார்க்க

சேலத்தில் 4 மையங்களில் இன்று சாலைப் போக்குவரத்து எழுத்துத் தோ்வு

சேலம் மாவட்டத்தில் சாலைப் போக்குவரத்து எழுத்துத் தோ்வு 4 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்திய சாலைப் போக்குவரத்துத் துறை சாா்பில் ஓட்டுநா் உள்ளிட்ட பதவிகளுக்காக நடத்தப்படும் இந்த எழுத்துத... மேலும் பார்க்க