செய்திகள் :

ஒன்றாக இணைந்த குடும்பம்...பாக்கியலட்சுமி தொடர் 1469 எபிசோடுகளுடன் நிறைவு!

post image

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாக்கியலட்சுமி தொடர் 1469 எபிசோடுகளுடன் நிறைவடைந்தது.

கணவரால் ஏமாற்றப்பட்டு கைவிடப்பட்டப் பெண், சுயமாக முன்னேறி, எப்படி குடும்பத்தைக் கவனிக்கிறாள் என்பதை கருவாக வைத்து இத்தொடர் எடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு முதல், 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வந்த பாக்கியலட்சுமி தொடர், கடந்த வெள்ளிக்கிழமை(ஆக. 8) நிறைவடைந்தது.

கதைப்படி, பாக்கியலட்சுமியின் கணவர் கோபி திருந்தி, பாக்கியலட்சுமி உடன் இணைகிறார், கோபியின் இரண்டாவது மனைவி ராதிகாவை, பாக்கியலட்சுமி ஏற்றுக்கொண்டு குடும்பம் ஒன்றாக இணைகிறது. இத்துடன் இனியா - ஆகாஷ் திருமணம் நடக்கிறது.

இவ்வாறாக பாக்கியலட்சுமி தொடரின் கிளைமேக்ஸ் ஆனது பல்வேறு திருப்புமுனைக் காட்சிகளுடன் நிறைவடைந்துள்ளது.

இத்தொடரில் நடிக்கும் ஒவ்வொரு நடிகர்களும், இந்தத் தொடரில் நடிக்கும்போது கிடைத்த அனுபவங்களையும், சக நடிகர்களுடான நட்பினையும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

5 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வந்த பாக்கியலட்சுமி தொடர், சிலருக்கு சலிப்பை ஏற்படுத்தி இருந்தாலும், பலருக்கு சற்று சோகத்தையே ஏற்படுத்தி இருப்பதாக சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பாக்கியலட்சுமி தொடர் ஒளிபரப்பாகி வந்த இரவு 7 மணிக்கு, திங்கள்கிழமைமுதல் மகாநதி தொடர் ஒளிபரப்பாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தொலைக்காட்சியிலும் வெளியாகும் மாமன்!

The series Pakhyalakshmi, which was aired on Vijay TV, ended with 1469 episodes.

மந்திரம் போன்றது... ரசிகர்கள் குறித்து அனுபமா நெகிழ்ச்சி!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்கள் குறித்து நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். பிரேமம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழில் கொடி படத்தில் அ... மேலும் பார்க்க

மோனிகா பாடலுக்காக மோனிகா பெலூச்சி கூறியதென்ன? பூஜா ஹெக்டே பெருமிதம்!

கூலி படத்தில் பிரபலமான மோனிகா பாடல் நடிகை மோனிகா பெல்லுச்சிக்கு பிடித்துள்ளதாக பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படத்தில் பான் இந்திய நடி... மேலும் பார்க்க

கூலி பட சிறப்புக் காட்சிக்கு அனுமதி!

கூலி திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி, ஒரு நாளுக்கு 5 காட்சிகளைத் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

கூலி ரிலீஸ்... ராமேஸ்வரத்தில் புனித நீராடி வழிபட்ட லோகேஷ் கனகராஜ்!

கூலி திரைப்படம் நாளைமறுநாள் (ஆக. 14) வெளியாகவுள்ள நிலையில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் புனித நீராடி சாமி தரிசனம் செய்தார்.கூலி திரைப்படத்துக்கான புரமோஷன் பணிகள் முடிந்த... மேலும் பார்க்க

குரல்வளை புற்றுநோயின் ஆரம்ப நிலையை செய்யறிவு(ஏஐ) கண்டறியும்: ஆய்வில் தகவல்

ஒருவரின் குரல் பதிவைக் கொண்டு குரல்வளை புற்றுநோய் ஆரம்ப நிலையை செய்யறிவு(ஏஐ) தொழில்நுட்பம் கண்டறியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். செய்யறிவு அல்லது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்(ஏஐ) யாரும் எதிர்பாரா... மேலும் பார்க்க